விரதம் ஓய்வு

உண்டிபடியில் கால் எடுத்து வைத்தபோது தான் ஞாபகம் வந்தது, இன்று வெள்ளிகிழமை அல்லவா? அதனால் என்ன?.. ஆம், இன்று நான் உணவு எடுத்துக்கொள்ள மாட்டேன் அல்லவா? ஆனால் நான் ஆத்திகன் அல்லானே? பின் எதற்கு 'விரதம்'?

இது விரதம் அன்று, ஓய்வு!. வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்து, நான் வாய்வழியாக திணிக்கும் குப்பைகளை பதப்படுத்தி, அதிலிருந்து என் உடம்பிற்குத் தேவையான புரதம், வைட்டமின் முதலானவற்றை பிரித்து எடுத்து, 'நான்' என்ற இயந்திரம் இயங்க உதவுகிறது ஜீரண இயக்கம்.

இதற்கு ஓய்வு அழிக்க வேண்டாமா? சரிதான்! அப்படி என்றால் இன்று இந்த நாக்கின் பாடு திண்டாட்டம் தான். காலை அவசரத்தில் உண்ண மறந்துவிட்டதாக நாக்கிடம் கூறிவிடலாம்.

ஆனால், பத்தரை மணி வாக்கில் ரமேஷ் 'பேண்டரி' செல்ல அழைப்பனே? பின் ஒரு மணிக்கு மதிய உணவு. மூன்று மணி வாக்கில் 'ஜாவா க்ரீன்'. மாலையில், 'நெஸ்கபெ' என சுவையூக்கிகள் நீள்கின்றன. இன்றைய விரதம் கூடியதா எனக்கு ?!?!?


நீங்களாவது முயற்சித்துப் பாருங்கள். சனி, ஞாயிறுகளிலாவது!!

1 comment:

Unknown said...

Oh try pannalaame..!! :-)