வைர நெஞ்சம்

அவள் வைர நெஞ்சத்தவள்,
எறும்பு ஊறக் கூட கல் தேயுமாம்!

கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..

பிம்பம்

"அவளைக் காண்பதை தன் தினசரி 'வேலைகளில் ஒன்றாக' வைத்திருந்தான் கார்த்திக்" என்று சொன்னால் அது அபத்தம். பேருந்து நிறுத்தத்தில் மதியை காணாமல் அவனால் வேலைக்குச் செல்ல முடியாது. அவளைக் காணாததனால் அலுவகத்திற்கு விடுப்பு எடுத்ததும் உண்டு.

அவன் பிற ஆண்கள், பெண்களை நோட்டம் விடுவதைப் போல அவளைக் காண்பது கிடையாது. அவன் பார்வையில் காதல்... காதல் மட்டும் தான். அவனுக்கு தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெறாத ஒன்றை அவளிடமிருந்து கிடைக்கப் போவதாக உறுதியாக இருந்தான்.

இந்திந்த காரணங்களினால் தாம் காதல் வரவேண்டும் என தமிழ் முன்னோர் எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. அவ்வாறு எழுதி வைத்திருந்தாலும் அவனால் காரணம் கூற இயலாது. எழுதி வைக்காதிருத்தலுக்கு அவர்களையும் நம்மால் குறை கூற இயலாது. பாவம், அவர்களும் அறிந்திருக்க மாட்டார்கள் போல.

பிறக்கும் முன்னே குடிகார தந்தையையும், ஐந்து வயதில் தாயையும் இழந்த அவனுக்கு சாமி கும்பிட கூட எவரும் சொல்லிக் கொடுத்தது கிடையாது.

என்றாவது ஒருநாள் மதியின் அன்பு, பாசம், காதல் கிடைக்கும் என்றிருந்தான், கார்த்திக். இவற்றிற்கும் மேல் ஒன்றுகூட அவன் இறைவனிடம் வேண்டியது இல்லை, அவளைக் கண்ட நாள் முதல் அல்லது அவன் சாமி கும்பிட ஆரம்பித்த நாள் முதல்.

அன்றும், என்றும் போல மதியை கண்டு கொண்டே சாலையை கடக்க முயற்சித்த போது அது நடந்தது. அவன் விழி மூடும் போது, அதன் மணியில் கடைசியாய் பதிந்த பிம்பம் மதியினுடையதாய் தான் இருந்திருக்க வேண்டும்.

அவனுக்காக பதறிய மனம் மதியினுடையதாய் இருந்தது. அவன் தாய் கூட மேல்லோகத்தில் அவனைக் கண்டு இவ்வளவு பதறியிருக்க மாட்டாளோ?.

அன்று இரவு மதியின் தலையணையை அவள் விழி நீர் நனைத்தது. தானும் கொண்டிருந்த வெளிப்படுத்தாத காதலால் தான் அவனுக்கு இந்த கதி என்ற குற்ற உணர்ச்சி அவளை சாகடித்து.

மீண்டும் கண்விழித்த போது அவன் விழியில் விழுந்த பிம்பமும் மதியினுடையதாய் தான் இருந்தது, மறுநாள் காலை மருத்துவமனையில்.

நியூயார்க் நகரம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காஃபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?
வா அன்பே! நீயும் வந்தால்
செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

பழைய மாமல்லபுரம் சாலை

சிறிய முள் ஒன்பதில் இருந்து பத்தை அடையத் துடித்து கொண்டிருந்தது. பெரிய முள் மூன்றை வருடிக் கொண்டிருந்தது.

'சாய் பாபா மெஸ்' என ஆங்கிலத்தில் எழுதி இருப்பது மின் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. ரமேஷ் அன்று அதிகாலை தான் தன் இரண்டு வருட 'ஆன்சைட் பணிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பியிருந்தான். 'இயர் பீஸ்' காதிலும் நிறுவன அடையாள அட்டை பெல்டிலும் இருப்பது அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதை உறுதி செய்தது.

ரமேஷ் மெசிர்குள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பவில்லை . ஏனெனில் அங்கு குழுமிருந்தவர்கள் அநேகர் அவனது துறையினர் தாம். மெச்சில் கிடைக்கும் உணவுகள் 'ஹோம்லி புட்' ஆக இருக்கும். அதனாலே அந்தப் பகுதியில் 'சாய் பாபா மெஸ்' புகழ்.

தன் பையை இறக்கி வைத்து, கை கழுவி விட்டு இருக்கையில் அமர்ந்தான், ரமேஷ். அவன் அங்கு கண்டது. பெயர் அர்ச்சுன் , பத்து வயது குழந்தைத் தொழிலாளி. அனுபவம் இரண்டு மாதம்.

ரமேஷ் கண் முன்னால் மேஜை துடைக்கபட்டது. தோசை 'ஆர்டர்' செய்யப்பட்டது. அரை மனதுடன் அரை தோசையை உண்டு விட்டு கை கழுவினான். மெதுவாக அர்ச்சுனை நோட்டம் விட்டுகொண்டே மீண்டும் மேசைக்கு வந்து அமர்ந்தான். தன் பையில் இருந்து ஒரு கோப்பை(file) எடுத்தான்.

அதில் தன் 'ஆஃப்ஷோர்' அணியினருக்கு வழங்கியது போக சில 'பாரின் சாக்லேட்' இருந்தன. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதற்கு 'போனஸ்' ஆக வாடிக்கையாளர்கள் வழங்கிய 10,000$ க்கான காசோலையும் இருந்தது.

சாக்லேட்'ஐ அர்ச்சுனுக்கு கொடுத்தான். அப்போது அர்ச்சுன் மெஸ் முதலாளியை ஓரக் கண்ணால் பார்த்து, அவர் சம்மதத்தை பெற்றுக் கொண்ட பிறகு சாக்லேட்'ஐ பெற்றான்.

அப்போது ரமேஷ் மகிழ்ந்தான், அர்ஜுனை மகிழ்வித்து. "இந்தக் கோப்பில் இருக்கும் சாக்லேட் மட்டுமல்ல உனக்கு" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடையை கட்டினான் ரமேஷ்.

வித்தவுட்

என்னடா இது வாழ்க்கை, தினமுன் ஒன்று போலவே இருகிறதே என சலித்து இருந்தபோது இன்று காலை நடந்தது இது...

எப்பவும் போல இன்று காலையும் பேருந்தில் ஏறுவதற்கு எஸ்.ஆர்.பி நிறுத்தத்திற்கு வந்தேன். அந்த மிதவைப் பேருந்து நான் சாலையை கடக்கும் வரை காத்திருந்த பொது எனக்கு சந்தேகம் வரவில்லை.

மட மட என காலை அவசரத்தில் சாலையை கடந்து வந்தவுடன் பேருந்தில் ஏறிவிட்டேன். உள்ளே ஏறியவுடன் இரண்டு பரிசோதனையாளர்கள் பயணிகளின் பயணச்சிட்டுகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

என்னைக் கண்டவுடன், என்னிடமும் பயணச்சிட்டு கேட்கப்பட்டது. நான் பேசும் முன்பே என் அருகிலிருந்தவர் பேசிவிட்டார். அப்போது விவாதம் பின்வருமாறு நடைபெற்றது.

அவர்: அவரு இந்த ஸ்டாப்ல தாங்க ஏறுனாரு .

ப.ப: எப்டிங்க ஏறிருப்பாறு, அதான் சூபர்வைசர் கீல நிக்கிரார்ல.

நான்: வெளிய யாரும் இல்லயே.

அதற்குள் பராக்கு பார்க்க சென்றிருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்த சூபர்வைசர் வாக்குவாதத்தில் கலந்துகொண்டார்.

ப.ப: சார், இந்த ஸ்டாப்ல ஏருனாராம்.. இவரு பாத்தாராம்..

சூ.வ: யாரது..

ப.ப: இவருதான்

சூ.வ: யோவ். உன் வேலைய பாத்துட்டு போயா.

நான்: ஹலோ சார் மரியதையா பேசுங்க... டிக்கெட் செக்கிங்நா வெளிய இருந்து யாரும் ஏறாம பாக்க வேண்டியது தான... இல்ல டோர மூடியிருகலாம்ல...

இவ்வாறு தொடர்ந்த சூடான விவாதம், பிறகு பேருந்து கிளம்ப வேண்டும் என்றபடியால் எப்படியோ முடிவடைந்தது.

இடையில், ஒருவர் "அமைதியா இருங்க சார் பஸ் கெளம்பனும்ல" என்றார்.

"ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது கூட தவறு போல, இவனுக்கு உதவப் போய் நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன்" என அவர்(எனக்கு உதவியவர்) எண்ணியிருப்பார் என நினைத்துக்கொண்டே 'தாங்க்ஸ் பாஸ்' எனக் கூற, அவரோ "உண்மைய சொல்றதுக்கு எதுக்குங்க தாங்க்ஸ் எல்லாம்" எனகூறி ஒரு புன்னகை அழித்தார்.

பேருந்து சென்றுகொண்டிருந்த போதே, இதை எல்லாம் கண்டுகொண்டிருந்த பெண் ஒருத்தி சென்ற வாரம் இதே போல் ஒரு நிகழ்வை தான் கண்டதாகவும், அப்போது எவரும் வேறு எவரும் வாய்திறக்கவில்லை எனவும், தான் சொல்லி எவரும் கேட்கவில்லை எனவும் கூறினாள்.

நல்ல அனுபவமாக இருந்ததாக நினைத்துக்கொண்டேன்.

உனக்கு பிடிச்சிருந்தா…எனக்கும் தான்

தொலைபேசி விடாமல் சிணுங்கியது…. எடுக்க ஆளில்லாமல் அல்ல. அவன் குளியல் அறையிலிருந்து வெளியே வருவதற்கும் மணியடிப்பது நிற்பதற்கும் சரியாய் இருத்தது. இவ்வளவு சீக்கிரம் எழுந்து அவனுக்குப் பழக்கம் இல்லை. அம்மாவின் வற்புறுதலினால் எழுந்தாலும், இன்று திருமணம் என்பதால் உற்சாகமாகிவிட்டான். ஏழு மணிக்குத் திருமணம்.

அவன் கை கடிகார முள் 7।35 எனக் காட்டியது, நேற்று மாலை நிலவரப்படி. பத்து ஆண்டுகளிருக்கும், அவன் பொதுத் தேர்வு எழுத வெறும் கையுடன் செல்வதைக் கண்டு அந்த கடிகாரத்தை அவள் பரிசளித்து. ஆனால் சுவர் கடிகாரம் 4।55 எனக் காட்டியது.

திறந்த மேனியுடன், உடல் முழுக்க நீர் மொட்டுக்களுடன், இடுப்பில் கட்டிய துண்டுடன், தலையைக் கூட காயவிடாமல், சோபாவில் அமர்ந்தான்। இன்று திருமணம் என்றாலும் விழிகள் இரண்டும் அரை நித்திரையில் கரைந்தன.

சில ஞாபகங்கள், சில கொண்டாட்டங்கள், சில துயரங்கள், சில சாதனைகள், சில சோதனைகள், இவ்வாறு பற்சில கண் முன் வந்து சென்றன. கடந்த கால நாட்கள் மொத்தத்தில் இனிமையாகவே தெரிந்தன. குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வாழ்க்கைப்பருவம் ஆகியன அனைத்தும் கடந்து வந்தது அவர்களது பந்தம்.

எதிரெதிர் வீட்டில் குடியிருந்த அவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்। ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவனால் அவளுக்கு அளிக்க முடிந்தது நாளனா ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் மட்டுமே। இன்றும் கூட அதையே கடைபிடிக்கிறான்। அவனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கேக்கை காணமுடிந்தது…॥ ருசிக்கவும் தான்।.

அவர்கள் நெருங்கிப்பழக விதை விதைத்த நிகழ்ச்சி: ஒரே பள்ளியில் படித்த அவர்களுக்கு அன்று பொதுத்தேர்வு। பள்ளிக்கு அவளை விட்டுச்செல்ல வந்த தந்தை, “வாட்சுல மணி சரியா இருக்காமா? ” எனக் கேட்டபோது அவள் நினைவுக்கு வந்தது ‘திருச்செந்தூர் முருகன் கோவில்’ செந்நிற காப்புக்கயிறு மட்டும் கட்டியிருக்கும் அவன் கைகளே।உடனே தந்தையிடம் மன்றாடி, அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை அவனுக்கு பரிசளித்தாள்।இருவரும் படிப்பில் கெட்டி என்றாலும், அவளுக்கு கோவையிலும் அவனுக்கு மதுரையிலும் பட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது।.

இடவேற்றுமையால் பிரிந்திருந்தாலும் மனவொற்றுமையால் சேர்ந்திருந்தனர். அதற்கு மின்னஞ்சல், தொலைபேசி , செல்போன், கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டிகள் ஆகியவை உதவின. வாழும் யுக்திகளை இருவரும் பரிமாறிப் பயின்றனர். கல்லூரி வாழ்வில் இருவரும் பண்பட்டனர்.கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணியமர்த்தப்பட்டனர். இருவரின் எண்ண்ங்களும், திறமையும், வளர்ச்சியும் ஒன்று போல் இருந்தன……இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண் முன் வந்து சென்ற அந்த தருணத்தில்…. க்ரீங்,க்ரீங்…..க்ரீங்,க்ரீங்….. என திரும்பவும் தொலைபேசி மணி அடித்தது. அது வரை உறவாடிக்கொண்டிருந்த இமைகள் இரண்டும் பிரிக்கப்பட்டன.அவன் ரிசீவரை எடுத்தான்…. ஆம்! அவளே தான். .

"என்னடா… எழுந்துட்டியா?… ".

" ஆமா சத்யா, இப்பதான் குளிச்சேன், … குளிச்சிட்டு சோபால உக்காந்து லேசா கண்ணசந்தே…"

" கிறுக்கா! குளிச்சா தொவட்ட மாட்டியா…. கல்யாணத்துல மூக்கு ஒலுகிட்டு யே பக்கத்துல போஸ் குடுக்க போரடா!! ".

" சரி, இத சொல்ல தான் போன் பன்னியா? "

" இல்ல… நா எடுத்து குடுத்த ட்ரஸ் பிடிச்சிருக்கு தான? "

"அதுக்கு என்ன….. உனக்கு பிடிச்சிருந்தா, எனக்குந் தா!"

"அப்றம்ம்… அப்பா சொன்னாரு… அவரு உள்ள வர்றதுக்கு முன்னாடி தங்க செய்ன் போட்டு வரவேற்பாங்களா"

"பொண்ணோட பெறந்த அண்ணன், தம்பி தான் போடுவாங்க….. அதுக்கு நா முன்னாடி நின்னு செய்ன் போட்டு வரவேற்கனும்…. அவ்லொ தான!… "

" டேய்! மதன்னா, மதன் தான்!…… வெரி குட்.. ஓகே… பய் டா…. சீக்கிரம் ஆறு மணிக்கெள்ளா வந்துறு சரியா…. தோ அவர்ட்ட இருந்து கால் வருது….. பய், கால் யூ லேட்டர்…"

" பய்…. ஹெவ் அ குட் டே "

அவன் மதன் என்ற மதன்குமார். அவள் ஜோதி என்ற சத்யஜோதி. இன்றைய மகிழ்ச்சி எண்ணியைத் தொடக்கிவைத்து ரிசீவரை வைத்தான். மெத்தை மீது அவளுக்கு பிடித்த, அவனுக்கு பொருத்தமான மெரூன் நிற சர்ட்டும், சான்ட்ல் நிற பேண்டும் மஞ்சளிட காத்திருந்தன.

மதனும் ஜோதியும் நண்பர்கள். இதை மனதில் கொண்டு திரும்ப ஒருமுறை இக்கதையை வாசியுங்கள்... என்ன உலகமடா இது!!

சுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால்

பல்லவி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம் 1
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

சரணம் 2
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

சொல் புதிது பொருள் புதிது

ஒன்றாய் மனம் விடாமல் பேசியிருக்கிறோம்...
ஒன்றாய் வெவ்வேறு தட்டில் சாப்பிட்டுயிருகிறோம்...
கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி ஒன்றாய் நடந்திருக்கிறோம்...
இவ்வாறுதான் நானும் அவளும்...
ஆனாலும் அவள் இன்று கூறிய சொல் புதிது பொருள் புதிது,
"உன்னோட கொஞ்சம் தனியா பேசனும்"


பிகு:அன்பரே! 'பொருளை' நீங்களே நிரப்புங்கள்!!

அதைத்தவிர

முன்பெல்லாம்,
ஒரு ரூபாயாவது பிச்சை அளித்த மனம்,
இன்று மறுத்து ஏசுகிறது,
"அதைத்தவிர உன்னால்
வேறென்ன செய்யமுடிந்தது?" என்று.

முழுக்கு

காதலுக்கு வருகை அளித்து,
சாதிக்கு முழுக்கு அளிப்போம்,
சமூகம் எனும் வகுப்பறையிலே!

அழகி

வேற்று கிரகத்து பெண்டிரும் அழகாய் இருப்பாள்...
சேலையில்...

இரண்டாம் மணம்

தமிழ்,
தாயாய்,
சகோதரியாய்,
தோழியாய்,
காதலியாய் இருந்தாள்.
இப்போது மனைவியாய் இருக்கிறாள்;

விவாகரத்து தேவையில்லை
இரண்டாம் மணம் புரிய,
தமிழ் எனும்
முதல் மனைவியிடமிருந்து;

வாடிய மலர்

வாடி இருந்த மலரும் அழகாயிருந்தது,
அவள் சூடியமையால்.
அது அழகாய் இருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை போலும்,
ஏனோ அதை அவள் கலைந்து விட்டாள்

யாரந்த மலர்

நடுவினிலே மஞ்சளும், அதைச்சுற்றி வெண்மையும்
நிறைந்திருந்த அந்த மலரின்
பெயரை அறிய முடியவில்லை;
அதைச் சூடியிருந்த மலரின்
பெயரையும் தான்.

மூன்றாம் காதல்

அவளைப் பார்த்து இன்புற்று,
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,

"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.

"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.

என் இமைக்குள்

ஆண்கள், பெண்களை இமைகளுக்குள் வைத்துப்
பேணத் தவம் இருந்தாலும்,
அவர்கள், 'உன் கண்களுக்குள் இடம் வேண்டாம் எனக்கு',
எனச் சொல்லி, இரும்பு முலாம் பூசிய பொன்மலரின்
மொட்டுக்குள் இடம் தேடி அழைகின்றனர்.

அவள்

மையிட்ட கருவிழிகளுடன் அவள் அழகாய் சிரித்தாள்,
கண் சிமிட்டி என்னை ரசிக்க வைத்தாள்,
இனிக்க இனிக்க கொஞ்சிப் பேசினாள்,

பேருந்தில், தன் தாய் மடியில் மழலையாய் அவள்....

இரண்டு நிமிடக் காதல்

இரண்டொரு நிமிடத்தில் வரும் காதல்,
ஐந்து நிமிட இன்பத்தை எண்ணியே வருவது;
இரண்டொரு வருடம் நீடித்து காதல் ஆகும்
நட்பை விட அது கேவலமானது.