வரி விலக்கு

நட்பு எனும் வரியை விலக்கு செய்து
காதல் எனும் சலுகையை எனக்கு
எப்போது அளிக்கப்போகிறாய்

காதல் தேவதையின் தண்டனை

இதுநாள் வரை காதல் என்னைத் தீண்டிவிடாமல் தற்காத்து இருந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட இருக்கிறேன் நான் .

காதல் தேவதையிடம் என்னைக் காட்டிக்கொடுதுவிட்டார் தபூ சங்கர்.

தீர்ப்பு வழங்கப்பட்டாயிற்று; காதலை காதலிக்க வேண்டுமாம்
காதலி கிடைக்கும் வரை...
காதலி கிடைதப்பிறகு ஆயுள் தண்டனை அரங்கேற்றப்படும்.

தற்போது காதலைக் காதலிக்கிறேன்.

ஆயுள் தண்டனைக்கைதியாய் காதல் தேவதையால் ஆசிர்வதிக்கப்படவுள்ளேன்.

ஆனாலும் நான் தற்போது காதலிக்கிற காதல் என்னை விடுவதாய் இல்லை.

ஆசை - காதல்

சத்குரு என்னை ஆசைக்கு அறிமுகப்படுத்தி
ஆசை வளர்க்க ஆசைப்படு என்றார்.

தபூ சங்கர் என்னை காதலுக்கு அறிமுகப்படுத்தி
காதலை காதலிக்கச் சொன்னார்.

நானோ ஆசையை காதலிக்கிறேன்.
காதலிக்க ஆசைப்படுகிறேன்.

கனவிலே கவிதை எழுதுகிறேன்

கனவிலே கவிதை எழுதுகிறேன்.
பேனா இல்லாமல், காகிதம் இல்லாமல்.
கவிதைக்கு பொய் அழகுதான்.
இந்தக்கவிதையும் அழகுதான்; ஆனால் பொய் இல்லை.

என்னே அருமையானக் கவிதை?!!
என்னால் எழுதப்பட்டதா, இக்கவிதை ?!
எனக்கே உரியதா, இக்கவிதை ?!
என் பெயருக்கு முன்னால் முழுமை பெறுவதா, இக்கவிதை ?!

ஆனால், விடிந்தவுடன் மறந்துவிடுகிறேன் இக்கவிதையை; உன்னை!!
கனவில் மட்டும் தான் வருவயோ ?!!
கவிதை வருவதனால், அதுவும் கனவில் மட்டும் வருவதனால்,
பகலிலும் கனவுகாணத் துணிகிறேன்.

ஆதலால், என் பகல்களைக் கொல்லாதே!
நினைவிலும் வந்துவிடு; முழு மதி காட்டிவிடு!
அச்சில் ஏற்றுவேன் உன்னை,
நம் மண அழைப்பிதழில் கவிதையாய்; உன் பெயர்!.

காதல் என்னை காதலிக்கிறது

இப்போது எல்லாம் காதல் என்னைக் காதலிக்கிறது !!

தன்னைப் பற்றி கவிதைகள் பல பாடச்சொல்கிறது.
அழகு நயம் பாராட்டச்சொல்கிறது.

ஒரே சீராக, நேரம் தெரியாமல் பேசச்சொல்கிறது.
கரம் பிடித்து ஊர் வலம் வரச் சொல்கிறது.

கனவில் நிதமும் அன்புத்தொல்லைகள் பல செய்கிறது.
'பொடா','லூசா நீனு', 'ஐயடா', 'புருசா' எனச் சொல்லி கொஞ்சுகிறது.

உள்ளங்கையில் மட்டும் ஒரு முத்தம் கேட்கிறது.
இதழ்களை எனதருகே கொணர்ந்து தன் மூச்சை சுவாசிக்கச் சொல்கிறது.

தன் விழி இரண்டையும் நொடி விடாமல் படிக்கச் சொல்கிறது.
'பொறுத்திருடா' எனச்சொல்லி கனவிலும் நினைவிலும்
வந்து வந்து செல்கிறது.

இப்போது எல்லாம் காதலை நான் காதலிக்கிறேன்!!

காதல் செய்

தன் தங்கை பவானி காதல் வயப்பட இருக்கிறாள் என்பதை அறிந்த மனோதத்துவ நிபுணராக பயிற்சி எடுத்து வரும் மீனா, அவளுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது.

.....
.....
.....
உன் வயசுல எதுவுமே தப்பா தெரியாது. அதே சமயம் எது சரின்னும் தெரியாது. எல்லாம் சரி மாதிரி தான் தெரியும். ஒரு மாற்றம் நடக்கிற வயசு. ஒரு குழந்தை தாய் வயித்துல இருந்து வெளிய வர்ற மாதிரி.... பிரசவம் ஒரு க்ரிடிகளான விஷயம். நீயும் இந்த வயசுல அப்டிதான். குழந்தைக்கு பிறந்ததுல இருந்து தடுப்பு ஊசி போடுவாங்க. ஆனா நமக்கு இந்த வயசுல அப்டி ஏதும் இல்ல. நம்மோட கட்டுப்பாடும் பொறுமையும் தான் நமக்கு தடுப்பு வேலி. அதுக்காக பசங்க எல்லாத்தையும் தப்பானவங்கனு சொல்ல வரல. இப்ப நான் சொல்ல போறது பசங்களுக்கும் பொருந்தும்.

சைண்டிபிக்கா பாத்தோம்னா பிசியாலாஜிகால் சேஞ்சஸ் நடக்குற வயசு.இந்த வயசுல இப்டி தான் இருக்கும். ஸ்கூல் படிப்புக்கும் கல்யாணத்துக்கும் இடையில இருக்குற இந்த காலம் தான் நம்மோட எதிர்காலத்த மட்டும் இல்ல வரலாறையும் தீர்மானிக்குது.

இன்னிக்கு காதலிக்கிறவங்க எல்லார்ட்டயும் அவங்க மனசு கிட்டயே பதில் சொல்ல சொல்லி கேட்டுப்பாரு... எதனால லவ் பண்றிங்கனு? அநேக பேர் கிட்ட முதல்ல இது தான் சிக்கிச்சுனு பதில் வரும். காதலிக்க ஆரம்பிச்சதுக்கு முன்னால எத்தன 'மாசம்' ரெண்டுபேருக்கும் பழக்கம் இருக்கும்னு கேட்டுப்பாரு? 'நாள்' கணக்குல தான் பதில் வரும்....

எல்லாமே வேகமா நடந்துடுது. அப்படியே ரொம்ப நாள் பழக்கமா இருந்தாலும் ரெண்டு பேருக்கும் லவ் ப்றதுக்கு தகுதி இருக்கணும். நான் சொல்ற தகுதி காசு பணம் வச்சிருக்குற தகுதி இல்ல. அந்த தகுதி அவங்க வாழ்க்க நடத்துரதுக்கானத் தகுதி. அவங்க செஞ்ச சாதனைய வச்சு தான் அந்தத் தகுதி இருக்கு.
அந்த சாதன செயல் அளவுல இருக்கணும். அத செஞ்சுட்டு அப்பா அம்மாட்ட உரிமையோட கேளுங்க.... உங்களுக்கு முழு சுதந்திரம் குடுப்பாங்க. குடுத்து தான் ஆகணும்.

இனிக்கு லவ் ஒரு கெமிகல் ரியாக்சன் . அதுக்கு வினை-ஊக்கியா தான் இருக்கு இந்த டிவி, சினிமா, மீடியா இத்யாதி எல்லாம்.

கல்யாணத்துக்கு 21 வயசுன்னு சொல்ற மாதிரி, எந்த வயசு காதலுக்குனு சொல்ல முடியாது. இது உடம்பு சம்பந்தப்பட்டது இல்ல; மனசு சம்பந்தப்பட்டது. அந்தப்பக்குவம் வரும் காலம் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும். சிலர் எப்பவுமே பக்குவப்படாமலே இருக்கலாம்.

இன்னிக்கு டைவர்ஸ் மட்டும் இல்ல, லவ் ப்றேக்கப்பும் அதிகமா இருக்கு. சிலர் கல்யாணத்துக்கு முன்னாடி, சிலர் கல்யாணத்துக்கு பின்னால. வாழ்க்கைல இறங்கும் போது தான் உண்மை புரிய வரும். ஒரு ஞான உதயம் பிறக்கும். இதுவரைக்கும் எடுத்த முக்கியமான முடிவுகள் எல்லாம் தப்போ'ன்னு ஒரு கேள்வி வரும்.

இன்னிக்கு லவ் பண்ண தயார் ஆறவங்க எத்தன பேர் வாழ தயார் ஆறாங்கனு தெரியல. எதோ பேசுறது... சின்ன வயசு ஞாபகங்கள ஷேர் பண்ணிக்கிறது இது மட்டும் தான் லவ்னு நினகிறாங்க. இது எல்லாம் ஒரு புது உறவோட தொடக்கம் மட்டும் தான். இத மட்டும் தான் உன் வயசுல இருக்குறவங்களுக்கு தெரிய வருது. டிவிலயும் சினிமாலயும் இத மட்டும் தான் காட்றாங்க. இதுக்கும் மேல என்னெனவோ இருக்கு.

இன்னிக்கு வாழ்க்க ஒரு அவசர கதில போய்ட்டு இருக்கு. உன் வயசுல இருகறவங்களும் ஒரு அவசர கதில வாழ்க்கையோட ரொம்பமுக்கியமான பெரிய முக்கியமான முடிவ இப்டிங்கறதுகுள்ள எடுத்திறிங்க. பொறுமை வேணும் .

பிராக்டிகலா ஒன்னு சொல்லட்டா? நீ படிக்கிற காலேஜ்ல நீ பழகற மாதிரி 5 பசங்க இருப்பாங்களா? நாளைக்கு வேலைக்குப் போனா ஒரு 5 பசங்க இருப்பாங்களா? கம்ப்யூடர் க்ளாஸ், பஸ் ஸ்டாப் இங்க எல்லாம் இன்னும் 5 பசங்க இருப்பாங்களா?

இன்னி
க்கு லவ் பண்றவங்க ஒவ்வொருத்தரும் இந்த 20 பேர்ல ஒருத்தர தான் நிச்சயம் பண்ணிட்டு இருக்காங்கனு என்னால அடிச்சு சொல்ல முடியும். தாராளமா எல்லார்டையும் பழகு, பசங்கடையும் தான். எல்லாரும் எப்டின்னு புரிஞ்சுக்கோ. பக்குவப்பட்டுக்கோ. அப்பறம் உன்னைக்கான சரியான ஆள தெரிஞ்சுகுவ.
.....
.....
.....

என் காதல் கதை II - ரம்யா

519 டீலக்ஸ் பஸ்... நல்லா ஜம்முனு தான் இருக்கு! மெட்ராஸ் வந்ததுல இருந்து இனிக்கு தான் முதல முதல்ல படம் பாக்க வெளியே வர்றேன். ஈதோ மாயாஜாலாம். மல்டிப்லக்ஸ்னு சொன்னாங்க. எப்டி இருக்கும்னு கேட்டதுக்கு போய் பாருன்னு சொன்னாங்க.

ஸ்டாப் வந்திருச்சு... இறங்கி நடக்கனும் போலேயே!!.. சரி நடப்போம். அட.. நிறையா படத்துல பாத்திருக்கேன்!!..உன்னாலே... உன்னாலே... படத்துல வினய் இந்த தூணுக்குப் பின்னால ஒளிஞ்சு நின்னு தான சதாவோட போன் பேசிட்டு இருப்பான். இப்ப அந்த எடத்துல, கிரீன் சர்ட் போட்ட பையன் ஒருத்தன் நிக்கிறானே...சட்ட கலரப் பாரு.. ராமராஜன் மாதிரி! ரீமேக்க இருக்குமோ? கேட்டா பேசன்னு சொல்லுவானுங்க...போன் பேசிட்டு இருக்கானே!! அந்த பக்கம் அவனோட சதா இருப்பாளோ??

ச்ச நான் பாத்த பாத்துட்டான்! ஐய்யயோ இனிமே வச்ச கண்ணு வாங்காம என்னையே பாக்க போறான். அட ... என்ன பாத்தும் பாக்காதது போல இருக்கான்? நல்ல பையன் போல? இல்லாட்டி நாம அவ்வளோ அழகா இல்லியோ? இல்ல.. இல்ல.. அவன் அவனோட ஆளோட பேசிட்டு இருக்கான்...

ஹும். நாமளும் இப்படி எப்ப பேச போறோமோ? எங்க டா இருக்கே நீ?? எப்ப டா வருவே??

எனக்கும் காலம் வரும்.. டேய் கிரீன் சர்ட் அப்பா வச்சுக்குறேன் உன்ன.... இவன வச்சுக்கிட்டு நாம என்ன பண்ண போறோம்? இவன் தான அல்ரெடி என்கேஜ் ஆய்டான்ல!

ஓகே! மகா டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டா!! இங்க டிக்கெட் 120 ரூபாயாம்!! எம்மாடியோவ்! ... இதே எங்க ஊர்ல நாங்க மூணு பேர் படத்துக்கு போனா 120 வராது...சென்னை பயங்கர காஸ்ட்லியா தான் இருக்கு!! சரி... உள்ள போவோம்.... அட மெடல் டிடெக்டர்'லாம்? செக்குரிடியோ?

க்கும்... யாரது.. அந்த கிரீன் டி-சர்ட்... நாயே! நீ அக்கா தங்கச்சியோட பொறகால?... அவங்க பின்னால போய் இடிடா...

நான்: ஸ்டுபிட்!!
மகா: என்னடி ஆச்சு...??
நான் : ஒன்னும் இல்ல... வாடி ..

இதுக்குன்னே வரானுங்க... இவனுக்கு போய் சர்டிபிகேட் குடுத்தேனே....ச்ச மூட் அவுட் பண்ணிட்டான்.
.
.
.
.
.
.
[படம் முடிகிறது]
இப்பலாம் எந்த படத்துலயும் 'வணக்கம்' போட மாட்டாங்களா? சரி கெளம்புவோம்...

ச்ச.. படத்துக்கு வந்ததே வெஸ்ட் .. அந்த கிரீன் டி-சர்ட்.... இடிய ட்.. ச்சே...

மகா: என்னடி... படம் எப்டி...
நான் : வாய மூடிட்டு வாடி...

அம்மா! நல்லா தல வலிக்குது...

ம்ம்ச்... இப்ப எவன்........
டேய் நீயே தானாடா...

நான்: பொருக்கி நாயே! சோற தான திங்கிற...

[சட் என கன்னத்தில் ஒரு அரை விட்டதும், மழை காளான் போல சில சமூக சேவகர்கள் டோஸ் விட்டனர்]

நான்: என்னடா மொறக்கிற.. பண்றதையும் பண்ணிட்டு...

[அனைவரும் கலைந்தனர்]

மகா: ஏய்! என்னடி பண்ணிட்ட.. உன் இடுப்ப தொட்டது இவன் இல்லடி.. அதோ பின்னால திரும்பிடே நடக்குற மாதிரி ஓடுறான்ல.. அந்த தொப்பி போட்டவன் தான்...

நான் : அப்ப இவன் அவனோட பிரண்டா இருப்பன். ஒரு கேங்கா தான்'டி வரானுங்க...உள்ள வரும்போது இவன்.. வெளிய போகும் போது அவன்....

மகா : இல்லடி.. இருக்காது!! அங்க பாரு அவன் பேரன்ஸோட படம் பாக்க வந்திருக்கான். எவனா இருந்தாலும் பேரன்ஸோட இருக்கும் போது இப்டி நடந்துக்க மாட்டான். அவங்கள பாத்தா டீசன்ட் ஆனா பேமிலி மாதிரி இருக்கு...

நான் : அப்டியா சொல்ற? ஆமா.. இருக்கலாம்... ஆனா?

மகா: சரி ... சரி... அப்டியே வா. போய்டலாம்...

அட ஆமா!... சாரி கேக்கணுமா??.. நான் பண்ணினது தப்பு தான்... ஆனா சாரி கேட்டு எனக்கு பழக்கம் இல்லியே...

அடடா! அவங்கள கிராஸ் பண்ணிதான் போகனுமா?அங்க நின்னு எவங்க எல்லாரும் என்னையே பாக்றாங்க...

ஐய்யயோ... அந்த அம்மா யாரு... அந்தப் பையனோட அம்மாவ இருக்குமோ?
என்ன நோக்கி வராங்களே!

அம்மா: என்னம்மா?! என் பையன் என்ன தப்பு செஞ்சான். இவ்ளோ பேருக்கு முன்னால அரஞ்சுட்ட....

ஐய்யயோ... இப்டிலாம் எனக்கு நடந்ததே இல்லையே!!

நான்: ஐயோ! சாரிமா! உங்க பையனுக்கு பதிலா வேற ஒரு பையன்ன அடிச்சுட்டேன்.

அம்மா : ம்ம்ம்!! ??

நான் : சாரி! வேற ஒரு பையனுக்கு பதிலா உங்க பையன்ன அடிச்சுட்டேன்.

அம்மா: அடிக்கிறது தான் உன் வேலையா?? எதுக்காக அடிச்சேன்னு சொல்லு.. அதுவும் நாலு பேருக்கு முன்னால...

நான் : அம்மா! நான் உங்கள இதுக்கு முன்னால எங்கயோ பாத்திருக்கேனோ?

அம்மா: பேச்ச மாத்தாத!! சொல்லு என் அடிச்ச என் பையன?? அவன் உன் கையா பிடிச்சு இழுத்திருந்தாலும் நீ பொது எடத்துல வச்சு அவன அடிச்சது தப்பு தான்...

அடடா! அவன அடிச்சது தப்பே இல்ல!!

நான் : அம்மா நீங்க பாக்யலக்ஷ்மி அக்கா'வோட கசின் சிஸ்டர் தான.... என்ன ஞாபகம் இல்லியா?

அம்மா : பாக்யவ உனக்கு எப்டி தெரியும்??!!

[அப்புறம் பாக்ய அக்காவ எனக்கு எப்டி தெரியும்னு சொன்னேன்

இப்படித்தான் என் காதல் கதை ஆரம்பித்தது!!!]

இப்படிக்கு,
ரம்யா

(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)

sateesh-iblog

My New Blog in English!!!! A New Start
http://sateesh-iblog.blogspot.com/

என் காதல் கதை I - பல்லவி

இன்னிக்கு ஏன் நான் பறக்குற மாதிரி இருக்கு?? இருக்காதா பின்ன, ஊர்ல அப்பாவோட டிவிஎஸ் 50 ய ஓட்டிட்டு, இப்ப புதுசா வாங்குன ஸ்கூட்டி பெப்'ப ஓட்டுறது, பிளைட் ஓட்டுறது மாதிரி தான் இருக்கும். இந்த
துப்பட்டா வேற, பறந்துட்டே இருக்கு...

இன்னிக்கு டீம்ல எல்லார்டையும் சொல்லியாச்சு, ரமா மட்டும் தான் பாக்கி. புதுசா குமார்னு ஒரு பையன் வரப்போறானாம்... அவனடையும் வண்டி வாங்குனத சொல்லிற வேண்டியது தான்.

அப்பா அந்த ஓட்ட வண்டிய செகண்ட்ஸ்ல இன்ஸ்டால்மன்ட்ல வாங்குனதா சொல்வாரு ...
இப்ப ரெடி கேஸ் குடுத்து...................................

ரோட்ல அந்தப் பையன், என்ன பண்றான்...... கிராஸ் பண்ண போறானா? இல்லியா? ........
போறானோ?... இல்ல... போறான்... போறான்... இல்ல... போறான் .... இல்ல... இல்ல .... இல்ல...போறான்.... டேய் நில்லுடா ...

ஐயோ! அம்மா!!!... என்ன ஆச்சு எனக்கு........

அப்பாடா .. என்னக்கு ஒன்னும் ஆகல... கைல தான் ஏதோ ஸ்க்ராச் மாதிரி இருக்கு...ஐயயோ என் அழகே கெட்டு போச்சு...

ஏன் இவங்க சத்தம் போடறாங்க ... அங்க ஏதோ கூட்டம் மாதிரி இருக்கே? ஐய்யயோ அந்த பையன்....

என்னாச்சு அவனுக்கு...

நான் : தள்ளுங்க ... தள்ளுங்க... என்னாச்சு ??!!

ஐய்யயோ கீழ விழுந்து கெடக்கானே....பக்கத்துல போய் பாப்போம்...
முருகா! என்ன ஆச்சு இவனுக்கு?....
[ சற்று முன் தோன்றிய சமூக சேவகர்களிடமிருந்து வசவு கிடைக்கிறது ]

இவங்க என்ன சொன்னாலும் பரவா இல்ல.. என் மேலயும் தப்பு இருக்குல ....

நான் : அண்ணே ஒரு ஆட்டோ கூப்டுங்க

இந்த அண்ணனும் ஆட்டோல வந்தா நல்லா இருக்கும் ...
ஆனா மூணு பேரா ஆட்டோல போக முடியாது... அதுவும் இவன படுக்க வச்சு போகணும்...

விதி ஏன் இப்டி என்னோட விளையாடுது .... கண்டவன எல்லாம் என் மடில படுக்க வச்சு.... கடவுளே...

ச்சே அப்டி நெனக்காத டி... உனக்கு உருப்படியா சைக்கிளே ஓட்ட தெரியாது...
காசு குடுத்து லைசன்ஸ் வாங்கி வண்டி ஓட்டுனா இப்டிதான், சனி பின் சீட்ல ஜம்முனு உக்காந்து வரும்....

இந்த ஆட்டோகாரன் ஏதோ நல்லவனா இருந்ததால வந்துட்டான்... இல்லாட்டி... போலீஸ கேசு அப்டி இப்டினு எதாச்சும் சொல்லி இருப்பாங்க...

இதே மாதிரி வருமே... அட நம்ம 'காக்க காக்க'...
மாயா அண்ட் .சி.பி அன்புச்செல்வன்.
மாயாக்கு அடி படாம.... அன்புச்செல்வன்' க்கு அடிபட்டிடுச்சு...
அன்புச்செல்வன் ஏன் யுனிபார்ம் போடாம இருக்கார்.
கேப்போமா ?!!
ஸ்டுபிட் கேர்ள்... எந்த நேரத்துல காமடி பண்ற.... இந்த ரண காலத்துலயும்.... ஹும்...

முதல்ல இவனோட சொந்தகாரங்களுக்கு சொல்லுவோம்....பையில மொபைல் இருக்கா? இல்லையே... பேண்ட் பையில வேற தேடணுமா....
ச்சே வேணாம்.... ஆட்டோகாரர் கிட்ட சொல்லி எடுக்க சொல்லுவோம்...
முதல்ல ஹாஸ்பிடல் போவோம்....

.
.
.
.
.
என்ன அட்மிட் பண்ண மாற்றங்களா?...
போலீஸ கேஸ் பயில் பண்ணனுமா?
என்ன சொன்றாங்க இவங்க... ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கார்...

ஆட்டோ காரர் : சார் சட்டம் எல்லாம் மாறிடுச்சு... சட்டப்படி இப்ப கேஸ் பயில் பண்ணனும்னு அவசியம் இல்ல... மொதல்ல டாக்டர கூப்டுங்க... நா பேசறேன்...

அப்டியா ? இது எல்லாம் நமக்கே தெரியாம போச்சு...!!நாட்ல என்ன நடக்குதுன்னு தெரிய மாடிங்குதுப்பா....நமக்கு இத எல்லாம் சொல்றாங்களா??
.
.
.
.
._____

இப்படித் தான் எங்கள் காதல் கதை ஆரம்பித்தது...

இப்படிக்கு,
பல்லவி
(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)

நீயா? அவளா?

காற்று மட்டும் புகக்கூடியவாறு,
கடற்கரையில் நாம் அமர்ந்த வேளையில்
உன் துப்பட்டா கொடுத்த ஸ்பரிசத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

நான் சவரம் செய்யும் போது,
உன் கண்ணம் கொண்டு
என் கண்ணம் உரசிய சுகத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

காலையில் நீ எழுந்து என்னை உசுப்ப,
உன் இதழ்கள் கொடுத்த
முத்தத்தின் புதுமையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

திருநீறு என் நெற்றியில் இட்டு விட்டு,
பிசிறூதி உன் மூச்சுக்காற்று
பரப்பிய பரவசத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

அமைதியான நீண்ட ரயில் பயணத்தில்,
அருகருகே அமர்ந்தாலும், உன் இதயத்தில் நானும்
என் இதயத்தில் நீயுமிருந்து நம் பகிர்ந்த இனிமையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்தில் இறங்கி
கால் நனைக்க, என் கரத்தை உன் கரத்தால்
இறுகப் பிடித்துத் தந்த நம்பிக்கையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

என் ஒவ்வொரு பெரு வெற்றிக்குப் பின்னும்
உன்னைத் தனியே சந்திக்கும் முதல் பொழுது
நீ என் நெற்றியில் கொடுக்கும் முத்தப்பரிசின் ஊக்கதை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

என் ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும்
என் அடுத்த வெற்றி வரை
எனக்கு நீ அளிக்கும் ஆதரவை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

நம் சிறு சிறு ஊடல்களுக்கும் பிறகு
நாம் சிந்தும் கண்ணீர்
தரும் ஆற்றுதலை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.

ஆனால், அவள் உன்னிடம்
தோற்று விட்டாள்...
வேறு யாருமல்ல அவள்
உன் தோழியாகிய 'காமம்' தான்.

வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)