காமத்து இன்பம்

தன் இமைகளாய் இருக்கலாம் 
அவன் கண்டது.
ஏதோ பார்வையை மறைத்தது. 
என்னவாய் இருக்கும்.

விரல்கள் கண்டான்.
பெருவிரல், மறுவிரல், இரண்டும் 
தன் விரல்களைத் தீண்ட வர.

தானுறங்கிய பஞ்சனையினை 
விட அதி மென்மையாய்.
அவள் முகம் காண மறுக்கிற 
இன்பத்தீண்டல் அது.

அவனின் பிற மூவிரல்களும் ஏங்க,
 அவளின் பிற மூவிரல்களும் 
தொட்டுக்கொண்டன.

அவள் பள்ளங்கள் நுகர்ந்தன, 
அவனது உணர்ச்சி நரம்புகள் 
வழியோடிய ரேகைகள்.

நகக்கண்கள் ஒன்றையொன்று 
காணாது ஏமார்ந்து வருந்தின.
கண்களிருந்தும் கண்ணீர் வரவில்லையே!

நெல்லிக்கனி போல உள்ளங்கை அவளுக்கு, 
பல நாள் நோன்பிருந்து வாடி வதங்கி 
இன்பப்பசியுற்றுக் கட்டியணைத்தது 
அவனது உள்ளங்கையை. 
அவனுடையதோ பலா தோல் போல.

இதுவரை மேலாகத் தொட்டுகொண்டிருந்த
 அவளது விரல்களும் 
அடுத்த நகர்த்தலுக்கு மும்முரமாயின.

அவளது வலக்கையின் பெருவிரலின் தலை 
அவனது இடக்கையின் முதுகின் பின்
சென்று கட்டிப் பிடித்தது.

பிறகு அடுத்த விரல் 
ஆழமான அந்தக் குழியில் விழுந்தது.
பிற விரல்களும் அதுபோல அனுசரணை செய்தன.

இணைந்தக் கைகளாய் உறங்கிக்கிடக்க,
இன்னொரு  கை அவளது இடக்கையை எடுத்து
அவனது கன்னத்தில் பரவச் செய்தது.

இன்னும் அவன் கண்கள் 
விளங்கவில்லை
தூங்கிக்கிடந்தன.

சக்தி மனசுல பாலா (பகுதி I)

                
                   இன்னிக்கு சக்திகிட்ட பேசிட வேண்டியதுதான்னு நினச்சுட்டு இருந்தாள் பாலா. ரெண்டுபேருக்கும் கல்யாணம் நடந்து 8 மாசம் இருக்கும்.  அவன்கிட்ட பேசணும். ஆனா என்ன பேசணும், எப்படி பேசணும், எதுக்காக பேசணும் இதுக்கெல்லாம் பாலா கிட்ட பதில் இல்ல.
                    பாலாக்கும் சக்திக்கும் வீட்ல பாத்து முடிச்ச ஏற்பாட்டுக் கல்யாணம். அதுவும், பாலாக்கு பையன் தேட ஆரம்பிச்ச போது கூட, அவ இப்ப கல்யாணம் வேணாம்னு சொன்னதால, அவளோட அப்பா அம்மா ரெடியா பச்சைக்கொடி காட்ட தயார இருந்தாங்க, ஒருவேள அவ யாரையாவது மனசில நினைச்சிருந்தாள்னா.

                    ஆனா அவளுக்கு காதல் கல்யாணம் மேல விருப்பமே இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற நேசம் தான் உண்மையானதுன்னு ரொம்ப நம்பினாள்.
சும்மா கிடையாது பாலா. பாக்க எளிமையான அழகி. அப்படி இருந்தாலே பிரச்சனை தான் பெண்களுக்கு. பல ப்ரோபோசல்ஸ். ஆனா, அவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணின பசங்களால இனிமே எந்தப் பொண்ணு கிட்டயும் ப்ரொபோஸ் பண்ண நினைக்க முடியாதபடி , எதாச்சும் பெரிய ரெஸ்டாரன்ட் கூப்டு போய் லேச்சர் குடுப்பா பாருங்க. இது எல்லாம் தெரிஞ்ச பசங்களுக்கு தான். பர்ஸ்ட் டைம் பாக்கிற தெரியாதவங்களுக்கு ரியாக்சனே வேற.

                    அவளுக்கும் ஆசை இருந்தது லவ் பண்ண. ஆனா ஒருத்தன மட்டும் தான். அதுவும் கல்யாணத்துக்கு பின்னால தான். அதுக்காக காத்துகிட்டும் இருந்தாள்.
காதல்ல ஜெயிக்கிற கோஷ்டிய விட தோற்கிற கோஷ்டி தான் அதிகம். அதிலும் அந்த ஜெயிக்கிற காதல்ல இருக்கிற உண்மை மேல அவளுக்கு சந்தேகம். அதுக்கு எல்லாம் அவளோட மெச்சூரிட்டி, விஸ்டம் தான் காரணம். ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது பல லவ் பெய்லியர்ஸ் பாத்திருக்காள். அது மூலமா நிறையா கத்துகிட்டாள். சாகுற வரைக்கும் ஒருத்தன மட்டுமே நினைக்கனும் அப்டிங்கறது அவள் கட்சி.

                    இன்னொரு விஷயம், அவள் டிக்சனரிய போலவே காதலுக்கு காதலுக்கு அர்த்தம் பார்க்கிற ஒருத்தன தேடினாள். அதையே அவளோட மனசுக்கு திரும்ப திரும்ப சொல்லிகிட்டாள். அப்படி ஒருத்தன் தான் தனக்கு கணவனா வரணும்னு வைராக்கியமா இருந்தாள். தனக்கு பையன் தேடும்போது பெரிய இன்டர்வியூ ப்ராசஸ், க்வஸ்டினர் எல்லாம் தயார் பண்ணி வச்சிருந்தாள். சக்சஸ்புல்லா 5 பசங்கள ரிஜக்டும் பண்ணினாள்.

                    ஒரே பொண்னாதலால அவளுடைய இஷ்டம் தான் அவள் அப்பாவுக்கும்.
இவ்ளோ க்ளோசா இருந்த அப்பா, ரொம்ப நாள் அவளுக்கு க்ளோசா இருக்க முடியல.
பாலா கல்யாணத்துக்கு 2 வருஷம் முன்னால ரோடு ஆக்சிடண்ட்ல சீரியஸா இருந்து தவறிட்டார். அப்பா பிரிவதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பையனோட ப்ரோபைல தன்னோட பைல இருந்து எடுத்து வரச் சொன்னார். அதில ரத்தக் கரை; அவருடையது தான். ஏதோ சொல்லவந்து சொல்லாமலேயே போயிட்டார். அது தான் சக்தி. அவனுடைய ப்ரோபைல் தான் அது. ஜோசியர் கிட்ட பொருத்தம் பாத்து மஞ்சள் தடவி இருந்த அதை ரத்தம் சேத்து மகள் கைல குடுத்துட்டு போயிட்டார்.

                    சக்தி வேலன் என்கிற சக்தி. கால ஓட்டத்தில மறந்து போன அப்பாவோட நெருக்கமான பால்ய சிநேகிதரோட பையன். மகளுக்கு வரன் பார்க்கையிலே தன்னோட பழைய நண்பன கண்டுபிடிச்சதுல அப்பா ரொம்ப சந்தோசப்பட்டதா பிறகு சக்தியோட அப்பா சொல்லியிருக்கார்.

                    அப்பாவோட இழப்புக்குப்பிறகு ஆறு மாசம் கழிச்சு, சக்தி அப்பாவோட முயற்சியால, மறுபடியும் கல்யாணத் திட்டம் பாலா முன் வந்தது. சக்தி அப்பா இப்ப பாலாவோட கார்டியன் ஆகிட்டார். சக்தி அப்பா பத்தி பல வருசங்களுக்கு முன்னால அப்பா நிறைய சொல்லிருப்பதாக அம்மா சொன்னாங்க. பாலாவுக்கு ஒரு சங்கடமான நிலைமை தான். ஆனாலும், தான் சந்தோசமா இருபத தான் அப்பா விரும்புவார்னு அவளுக்கு தெரிந்தது. அஞ்சு பசங்கள ரிஜக்ட் பண்ணியும் அப்பா எதுமே சொல்லல. பாலா விருப்பம் போல விட்டுட்டார். இப்ப அப்பா மேல இருக்கிற அன்பு , நம்பிக்கை, மரியாதையால சக்திய பத்தி எதுமே விசாரிக்காம கல்யாணத்துக்கு சம்மதிச்சாள் பாலா.

                    பாலா தன்னோட வைராக்கியம் , ஆசை , எதிர்பார்ப்பு இவையெல்லாம் அப்பாவோட காலடிக்கு போயிடுச்சுன்னு நினச்சுகிட்டாள். சந்தோசம் தான் அவளுக்கு சக்திய கல்யாணம் பண்ணிகிட்டதுல. ஆனா பின்னொரு நாள் வருத்தப்பட கூடாதுன்னு நினைச்சாள். பயந்தாள். இப்ப அதே பயத்தோட தான் சக்திகிட்ட பேச போறாள்.

                    அவளா பேச நினைக்கல. கல்யாணம் முடிஞ்ச கையோட, அவளோட தோழி ப்ரியா சக்தி குறித்து ஏதோ சொன்னாள் அதுவும் கல்யாண மண்டபத்திலேயே. அத பாலா உதாசினப்படுத்தினாள்.  சின்ன வயசில இருந்து எதுலேயும் போட்டி தான் பாலாவுக்கும் ப்ரியாவுக்கும்.

                    திருமணம் முடிந்து. இனிதே தொடங்கியது புது வாழ்வு. ரெண்டு பேருமே மற்றவங்கள பத்தி ரொம்ப தெரிஞ்சுக்க, ரொம்ப புரிஞ்சுக்க ஈடுபாடு காட்டல. பரிவு இருந்தது. நேசமும் இருந்தது. காதல்கள் மிக வெளிப்பட இல்லை. ஸ்பரிசங்கள் தெரிந்தன. இரவுகள் கடந்தது. ஊடல்களுக்கு வாய்ப்பில்லை. அமைதியாவே போனது. சுனாமிக்குப் பின் வந்த அமைதிய போல.

                    அடுத்து ஒரு முறை, கல்யாணத்துக்கு பிறகு ஆறு மாசம் கழிச்சு, ஆபிஸ்ல சக்தி பாலாவ ட்ராப் பண்ண வரும்போது, அவளோட லஞ்ச மேட் சொன்னது நிஜமாவே அதிர்ச்சியா இருந்தது. இதுகெல்லாம் பிறகு இன்னும் ரெண்டு பேர் சக்திய குறித்து பாலா கிட்ட பத்தி வைக்க, அவளால அமைதியா இருக்க முடியல. அது சந்தேகம் இல்ல. தன்னோட இயலாமைன்னு நினைச்சுகிட்டாள். தன்ன யாரும் ஏமாத்தலை, ஆனா தான் எமாந்துட்டதா நினைச்சுகிட்டாள். இத பத்தி தான் எக்ஸ்ப்லனேசன் கேக்கலாம்னு சக்திய அப்ரோச் பண்ணினாள் பாலா.

பகுதி II விரைவில். . . 

தில்லி நகரம் உறங்கும் போது... (பகுதி III )

என்னோட பேக்ல ஏர் இண்டியா  டேக பாத்த மார்ஷல் ஒருத்தர் என்னோட போர்டிங் பாஸ வாங்கி பாத்துட்டு, தற தறனு இழுத்துட்டு போயிட்டார் .உன்கிட்ட கடைசியா ஒரு வார்த்த கூட சொல்ல முடியல. அப்போ நீ கொஞ்சம் கொஞ்சமா சின்னதா தெரிஞ்ச என்னோட கண்ணுக்கு.... தமிழ் சினிமா படம் எபக்ட் போல இருந்தது. கண்ணுக்கு முன்னால ஏதோ கருப்பு புகை வந்து மறைக்கிற மாதிரி இருந்தது கொஞ்சம் கொஞ்சமா... அசையாம நின்ன. கை தூக்கி 'டாட்டா' சொல்ல கூட உனக்கு மனசு வரல.

நாம ரெண்டுபேரும் சேந்து உங்க அப்பவ திட்டினோம் மனசுக்குள்ள. போகப்போறேன். கடைசியா ஒரு போலிஸ்காரர் என்னோட பேக்ல இருக்கற டேகையும் கைல இருங்கற போர்டிங் பாசையும் செக் பண்ணினார். நா அவருக்கு சரியா கோ-ஆபரேட் பண்ணாம திரும்பி நீ இருந்த டைரக்சன பாத்தேன்.

எல்லா கம்யூட் வெஹுகிலும் போயாச்சு. நான் லேட்டா வந்ததால எனக்காக கடைசியா ஒரு ட்ரிப் அடிக்கபோறதா சொன்னான் என்ன இழுத்துட்டு வந்த மார்ஷல். கண்ணாடி வழியா தூரத்துல இருக்கற உன்னோட உருவம் மட்டும் தெரிஞ்சது. உன்னையே பாத்துட்டு இருந்தேன் இல்ல உன்னோட முகத்த மட்டும் பாத்துட்டு இருந்தேன் ... இல்ல .... உன்னோட கண்ண மட்டும் பாத்துட்டு இருந்தேன்... இல்ல ... உன் கண் எண்ட சொல்றத கேக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன்.

அதுக்குள்ள, திரும்ப இந்த மார்சல் "சர்! வீ ஷால் மூவ் " அப்டின்னு சொன்னான். வாழ்க்கைல எவ்வளவு பேர மீட் பண்றோம், பலரை மறந்துடறோம்... சிலரை ஞாபகம் வச்சிருக்கோம். ஆனாலும் அவன மறக்க முடியாது என்னால... "ஐ ப்ரே பார் யுவர் சூனர் கம் பேக்" னு சொன்னான் அவன். "நீ வாழ்க"னு அவன பாத்து மனசுல சொல்லிடு வண்டில ஏறினேன்.

A27 aisle சீட். விண்டோ சீட் கிடைச்சிருந்தா நல்ல தான் இருந்திருக்கும். பக்கத்துல ஒரு வயசான தாத்தா. அவருக்கு பக்கத்துல மிடில் சீட்ல ஒரு யங் பாய். இருபது வயசு இருக்கும். காலேஜ் ஸ்டுடன்ட் போல.காதுல ஐபாட், கைல நான் கேள்விபடாத ஒரு இங்க்லீஷ் நாவல். 'தாடி வக்க மாட்டோங்க ஷேவும் பண்ண மாட்டோங்க அப்டின்னு பாடற தாடி. பிளைட் டேக் -ஆப் ஆகி 5 நிமிஷம் இருக்கும்.

இதோ இப்ப கண்ணா மூடறேன். இந்த உலகத்துல உன்னையும் என்னையும் தவிர வேற யாரும் இல்ல. மரம், செடி, கொடி, வானம் , மேகம் , சூரியன் , செல்போன், லேப்டாப்.... இதுங்க கூட எங்க போச்சுனு தெரியல. நீயும் நானும் மட்டும் தான்.

இதுபோல கண்ண மூடின என்ன வரும்.. ப்ளாஷ்பேக் தான் ...


நிஜமாவே நம்ப முடியல.. எனக்குன்னு ஒருத்தி இருக்கா.. எனக்காகன்னு...

நாம ஒரே காலேஜ்ல 4 வருஷம் படிச்சோம். அப்போலாம் வரல. ஒரே கம்பெனில ஒரு வருஷம் வொர்க் பண்ணினோம் அப்பவும் வரல.
காலேஜ்ல பல தடவ உன்ன பாத்திருக்கேன்; சில தடவ பேசிருக்கேன். உன்ன பத்தி உன்னோட பழகாமலே தெரிஞ்சிருக்கேன்.

எங்கேயோ படிச்சிருக்கேன். ஒரு வயசுல பசங்களுக்கு ஒரு விதமான எண்ணம் வரும். தினமும் பாக்குற பல பொண்ணுங்கள்ல சில பொண்ணுங்கள மட்டும் பக்கத்துல வச்சு நெனச்சு பாக்கறது. பொண்ணுங்களுக்கும் இது பொருந்துமாம். இந்த விளையாட்டுல நானும் விதி விலக்கு இல்ல. அது ஏனோ தெரியல உன்ன அப்டி ஒரு தடவ கூட நெனச்சது இல்ல. உன் மேல ஒரு மரியாத இருந்தது. அப்றம், அப்டியே காலேஜ் முடிஞ்சது. ஒரே கம்பெனில ஜாப் ஜாயின் பண்ணினோம்.

ஒரு வருஷம் ஓடிடுச்சு. உன்ன அப்ப அப்ப பாப்பேன். எப்பயாச்சும் பேசுவேன். எனக்கும் ஏதும் தோனியது இல்ல.திடீர்னு ஒரு நாள் கால்ல கட்டோட வந்த. நீ ஒரு மாசமா ஆபிஸ்க்கு வராதது கூட எனக்கு தெரியாது. நாம ரெண்டு பேரும் 'அவ்ளவு' க்ளோசா இருந்தோம். உன்ன அப்டி பாத்த போது ஒரு மாதிரி ஷாக் ஆயிட்டேன், உனக்கு போய் இப்டி ஆகணுமா அப்டின்னு. நாம ரொம்ப மரியாத வச்சிருக்கிறவங்களுக்கு  ஏதாச்சும் கெட்டது  நடந்தா வருத்தப்படுவோம்ல, அது போல இருந்தது.

அப்புறம் ரெண்டு மூணு தடவ உன்ன பாத்தேன். ஒரு தடவ கேபிடேரியால இருக்கும் போது, நீயா வந்து பேசின. "என்ன .. ஒரு சாக்குக்கு கூட என்ன ஆச்சுன்னு கேக்க மாட்டிங்களா?" அப்டின்னு. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. தர்ம சங்கடமா போச்சு. "அப்டி இல்ல, இதே கேள்விய பல பேர் உங்ககிட்ட கேட்டிருப்பாங்க , நீங்களும் பல தடவ கத சொல்லிருப்பிங்க, எதுக்கு அதையே கேக்கணும்னு தான்" அப்டின்னு பதில் சொன்னேன்.
"தேங்க்ஸ்" அப்டின்னு சொன்ன. எதுக்குன்னு கேட்டதுக்கு "பார் யுவர் தாட்ஸ்" அப்டின்னு சொன்ன.

இப்டி தான் பேச ஆரம்பிச்சோம். அதுக்கப்றம் மரியாத குறஞ்சதுனு சொல்ல முடியாது. முன்ன எல்லாம் உன்ன பக்கத்துல வச்சு பாக்க விடாத அந்த 'மரியாத', இப்போ கொஞ்சம் கொஞ்சமா அனுமதி குடுத்துச்சு. 'மரியாத' அனுமதி குடுத்தாலும் நான் அந்த எண்ணத்த  சில நொடிக்கு மேல நீடிக்க விடல.
"போடா.. நீ எங்க .. அவ எங்க ... " அப்டின்னு தான் நெனச்சேன்.

ஒரு நாள் கேபிடேரியா'ல, வழக்கம் போல ஏதேதோ பேசிட்டு இருந்தோம். திடீர்னு கொஞ்சம் சீரியஸ் ஆகி உன்கிட்ட பேச ஆரம்பிச்சேன்.
"ப்ரியா! உன்கிட்ட ஒரு முக்கியமான ஒன்னு பேசணும். ஜஸ்ட் வான்ட் டூ ஷேர் மை தாட். டெல் மீ ஒன் திங், வாட் இப் வி பிளான் டூ கெட் மாரிட்."

இப்டி கேட்டதுக்கு அப்புறம் ஆச்சர்யமா என்ன பாத்த. நான் மேல தொடர்ந்து பேசினேன்.

"எனி வே யுவர் பாரன்ஸ் வில் சர்ச் பார் ய கய். அது ஏன் நானா இருக்க கூடாது. நாம ரெண்டு பேரும்  ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு இருக்கோம்.
இல்ல ப்ரியா, நான் இன்னும் உன்ன லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணல. அதுக்கு பெர்மிசன் கேக்கறேன். அவ்ளவு தான்.நேத்து நைட் தூங்க போறதுக்கு முன்னால இப்டி தோனுச்சு. அதான் உண்ட உடனே கேக்கறேன்.

ரொம்ப நாள் யோசிச்சு, எப்ப கேக்கலாம்னு நாள் குறிச்சு இத கேக்கல. அப்டி யோசிச்சு, உன்ன மனசுல நினச்சிருந்து, ஒரு வேள நீ வேணாம்னு சொன்னேனா, நாள பின்ன நாம எப்பயும் போல பேசிக்க முடியாது. அதான் உடனே கேட்டுட்டேன். இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்ல... ஏன்னா என் மனசுல வேறெதுவும் இல்ல இதத்தவிர.

யோசிச்சு சொல்லு... பலவிசயங்கள் ஒத்துப்போகனும். உங்க வீட்ல என்ன சொல்வாங்க. நல்லா யோசி. இப்ப முடிவெடுத்துட்டு, ச்சே! இவன போய் கட்டிகிட்டோமேனு நீ ஒருதடவ நெனச்சாலும் நீ எடுக்க போற முடிவுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்."

இப்டி நான் கேட்டதுக்கு நீ சொன்ன பதில்.....

(பகுதி III முற்றும்.... தொடரும்...)

திணறுகிறது

அனைத்தையும் பரிமாறிக்கொண்டோம்.
ஒரு சேரப் பாடினோம்.
ஒன்றாய் நகைத்தும் கொண்டோம்.
கை கோராமல் கடலீர மணலிலே
தடம் பதித்தோம்.
...
ஆனால் படுக்கையை, ஒருநாள் பங்கிட்டுக்
கொள்ள வேண்டியதை நினைக்கையிலே
நெஞ்சம் பரிதவிக்கிறது.
மூச்சும் ஒரு நிமிடம் திணறுகிறது.

நீயும்... நானும்! - கோபிநாத் (Apr 21)

நன்றி : ஆனந்த விகடன்


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம். ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் கலந்துகொள்ளப் போயிருந்தேன். Dating Harbour என்று ஓர் அழகான இடம். ஒரு பக்கம் படகுகள் சீறும்... மறு பக்கம் ஹோட்டல்களில் கேளிக்கைகள் களைகட்டும்.
நம் ஊர் கோயில் குளத்தில் இருக்கிற படிக்கட்டுகள் மாதிரி அங்கும் படிக்கட்டுகள் நிறைய இருக்கும். ஜோடி ஜோடியாக, குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் உட்கார்ந்திருப்பார்கள்.
ஒருநாள் மாலை நான்கு மணி இருக்கும் கருத்தரங்குக் கூடத்தில் இருந்து வெளியே வந்து அந்தப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தேன். சரியான குளிர். ஐந்து நிமிடங்கள் இருக்கும், அழகான வெள்ளைக்காரப் பெண் வந்து அமர்ந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். நானும் ஒரு ஹலோ சொன்னேன். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது எங்கிருந்தோ ஓடி வந்த ஓர் இளைஞன், என் அருகில் இருந்த பெண்ணை இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டான். மிக நீண்ட முத்தம். அவளைக் கட்டி அணைத்தான். இருவரும் இறுகத் தழுவிக்கொண்டனர்.
அருகில் நான் இருப்பதையோ, அங்கு நிறையக் கூட்டம் இருப்பதையோ அவன் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகுதான் கவனித்தேன். நடந்து போகிறவர்கள், அமர்ந்து இருப்பவர்கள் என எல்லாருமே இறுக அணைத்தபடி, தடவிக்கொடுத்தபடி இருந்தார்கள்.
'என்ன ஊருடா இது... விவஸ்தை கெட்டவனுங்க' என்று கோபம் எனக்கு. அரை மணி நேரம் கழித்து கருத்தரங்கில் என்னோடு பங்கேற்ற ஆஸ்திரேலிய நண்பன் வந்தான். அவனிடம், இருந்த கோபத்தை எல்லாம் கொட்டினேன், 'என்ன கலாசாரம் இது? ஆணும் பெண்ணும் இப்படி அணைத்துக்கொண்டு திரிகிறார்கள். இதைப் பார்த்து எங்கள் மக்களும் கெட்டுப்போகிறார்கள்' என்றேன்.
அவன் என்னிடம், 'உங்கள் ஊரில் ஆண், பெண் உறவின் கலாசாரம் என்ன?' என்றான். நான் மௌனமாக இருந்தேன். 'பெண்ணை நேசிப்பதும், அவளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் நல்ல கலாசாரம்தானே' என்றான். 'ஆமாம்' என்று தலையாட்டினேன்.

'அதைத்தான் இவர்களும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதழோடு இதழ் பதிப்பது முத்தம் பரிமாறுதல் மட்டுமல்ல. வெப்பத்தைப் பரிமாறுதலும்தான். உடல்ரீதியாகத் தன்னைவிட மென்மையான பெண்ணை அணைத்து அவளுக்குத் தடவிக்கொடுத்து வெப்பத்தை அவள் உடலுக்குத் தருகிறான்.' இந்த விஷயத்தை அவன் சொன்ன போது குளிர் நான்கு டிகிரியாக இருந்தது. எனக்கும் உடம்பு நடுங்கியது.
'பெண்களை மட்டுமல்ல... குழந்தைகளையும் அணைத்துக்கொண்டும், தடவிக்கொடுத்துக்கொண்டும் இருப்பதைக் கவனியுங்கள் . இது குளிர்ப் பிரதேசம்... இங்கே அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிற முறை இது. இதை 38 டிகிரி வெப்பத்தில் நீங்கள் செய்தால் அது உங்கள் முட்டாள்தனம். அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது' என்றான். எனக்குப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.
அதென்னவோ தெரியவில்லை. நம்மைவிடப் பலசாலியாக நம்பும் யார் செய்கிற காரியமும் சரி என்றே நமக்குத் தோன்றுகிறது. நம் சொந்த அடையாளம், நம் அபிப்ராயங்கள் எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்துவிட்டு, அடுத்தவருடைய ஷூவுக்குள் அடைந்துகொள்வதில் பேரானந்தம்.
குறைபாடுகளை ஒளித்துவைத்துக்கொண்டு, வெளிப்படுத்துகிற முகமும் பேச்சும் பொய்யானவை. நீங்கள் நீங்களாக வெளிப்படும்போதுதான் ஆரோக்கியமான தோழமை அமைகிறது. அந்த தோழமைக்குள் அழகியல் என்ற அம்சத்தைத் தாண்டி அறிவுப் பகிர்தல் நடக்கிறது.
எதிர்பாலின நட்பு, ஈர்ப்பு தொடர்பானதும்தான் என்றாலும், அடுத்த தலைமுறைக்குள் அதிகமான அறிவுப் பகிர்தல் நடக்க, பாசாங்குகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது ஆண்-பெண் நட்பு குறித்தது மட்டுமல்ல... தேசத்தின் வளர்ச்சி தொடர்பானதும் ஆகும்.
எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார் என்ற தொனியில் எதிர்பாலின நண்பரோடு அறிவியல், அரசியல், சமூகம், உலக வரலாறு என்று பல்வேறு விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. ஆனால், இவை பெரும்பாலும் நான் எவ்வளவு தகவல்கள் தெரிந்துவைத்திருக்கிறேன் பார் என்ற 'நிரூபிக்கும்' தோரணையாகவே நடக்கிறது. இந்த அலங்காரங்களைக் கழற்றிவைத்துவிட்டு 'கருத்துப் பரிமாற்றம்' என்ற அளவில் நடைபெறுவது குறைவுதான்.
பெண் தோழிக்குப் பிடித்த மாதிரி உடை அணிந்துகொள்வது, அருகில் வரும்போது ஆங்கிலம் பேசுவது, பிறந்த நாளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவது, தினமும் காலையில் Good morning Sms அனுப்புவது, ஏதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் போய் உதவுவது, கவிதைப் புத்தகங்கள் பரிமாறிக்கொள்வது இந்த எல்லாப் பரிவர்த்தனைகளும் அழகானதுதான்.
இந்த ஈர்ப்பு எல்லையைத் தாண்டி, வெறும் சென்ட்டிமென்ட் நட்புறவைத் தாண்டி நீயும், நானும் அறிவுள்ள இரண்டு மூளைகள் என்ற அளவுகோலிலும் நட்பு அளக்கப்பட வேண்டும்.
ஆண்-பெண் தோழமையை இந்தியச் சமூகம் சந்தேகத்தோடுதான் பார்க்கிறது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், போலியான எந்த வெளிப்பாடுகளையும் சமூகம் சந்தேகத்தோடுதான் கவனிக்கிறது. உலகம் முழுவதும் அப்படித்தான்.
ஆண்-பெண் தோழமை மிகவும் அற்புதமான, தேசிய விருத்திக்கான ஒரு நட்புறவு. இந்தத் தோழமையில் வெளிப்படுகிற உடல் மொழி, பேச்சு, தொடுதல் இவை அனைத்தும் அந்தத் தோழமை எவ்வளவு யதார்த்தமானது என்பதைச் சொல்லிவிடுகிறது.
இந்தியச் சமூகத்தின் அழுக்குப் படிந்த பழைய கட்டுக்கோப்புகளை நான் உடைக்கிறேன் என்ற மனோபாவத்திலோ, நான் ரொம்ப மாடர்ன் என்ற அளவிலோ, எதிர்பாலினத் தோழமை என்பது ஸ்டேட்டஸ் சிம்பல் என்ற உணர்வோடோ இயங்குகிற தோழமைக்குள் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை.
இயக்குநர் கரு.பழனியப்பன் 'நீயா... நானா' நிகழ்ச்சியில் ஒரு முறை சொன்னார், 'என் தந்தையிடம் எதையெல்லாம் சொல்ல முடிகிறதோ, அதெல்லாம் சரி. அவரிடம் நான் எதை மறைக்க முயல்கிறேனோ, அது தவறு' என்று.
உங்கள் எதிர்பாலினத் தோழமை குறித்து இயல்பாக உங்கள் வீட்டில் சொல்ல மனசு இடம் கொடுத்தால் அந்த நட்புக்குள் ஈர்ப்பைத் தாண்டிய அறிவுப் பகிர்தல் அவசியம் நடக்கும்.
நாகரிகம், உறவு பேணுதல், வசீகரித்தல், புனைவுகள் இன்றி நடந்துகொள்ளல், தன்மையாகப் பேசுதல், இடங்கண்டு செயல்படுதல் போன்றவற்றை வேறு யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடிகள் நமக்கு இல்லை.
அந்தப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் நமக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.
அற்புதமான ஆண்-பெண் தோழமைஅறிவுப் பகிர்தலோடு நடக்கட்டும்!

அதுவென்ன செய்யும்

"இம்முறையும் ஓங்கி அழுதேன் ...
கேட்கக் கூடிய தூரத்தில் நீ இல்லை ...
என் தலையணை மட்டுமே அறிந்திருக்கும் இதனை ...
வேறு சாட்சி ஏதும் இல்லை ...
பாவம் அதுவென்ன செய்யும் ...
வெண் விழியிற் செறியும்
நீர் துளிகளை உறுஞ்சுவதைத் தவிர ...
பார்! அதுகூட என் கண்ணீரை
துடைக்க முற்படுகிறது.... "
இவ்வாறு எழுதினான் காதலி இல்லாத
தனியொருவன் தன் டைரியில். 

தில்லி நகரம் உறங்கும் போது... (பகுதி II )

                 ஒரு அஞ்சு செகண்ட் இருக்கும்... நான் குடுத்தது லோயர் லிப்'ல தான்'னு நெனக்கிறேன். சரியா ஞாபகம் இல்ல. ஹ்ம்ம்.. நைஸ் பன்ச். உங்க அப்பா கவனிச்ச மாதிரி காட்டிக்கல... அப்றம் செம டோஸ் எனக்கு. .. அதையும் போன்ல சொன்ன நீ. என்னதான் இருந்தாலும் ஒரு ஐயர் பொண்ண ... சாரி.. .ஐயங்கார் பொண்ண அவளோட அப்பா முன்னாலேயே பப்ளிக் ப்லேஸ்ல 
கிஸ் பண்ண ஒரு தனி தைரியம் வேணும்.என்னோட தைரியத்த நிரூபிக்க நான் அப்டி பண்ணல ப்ரியா... ஏதோ தோனுச்சு... அதான் நீ வேற கேட்டியா. . .

                  இதோ கெளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு. நான் போக போறேன். செக்யுரிட்டி செக். க்யூல எனக்கு பக்கத்துல நீ நிக்கிற.  முழங்கால் தெரியறமாதிரி கௌன் போட்ட பொண்ணு வந்து "மேடம்.. ப்ளீஸ் கம் ஆன்  க்யூ" னு உண்ட சொன்னா.

                நீ அவள பாத்து சிரிச்சுட்டு என்ன பாத்த... எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு ப்ரியா. உன்னோட ப்யூடிபுள் ஐஸ் . நான் இருக்கற ஹைட்டுக்கு நீ என்ன அண்ணாந்து தான் பாக்கணும். 5.9' இருப்பேன் . என்ன அண்ணாந்து பாக்கற  அளவு நீ உயரமா இருப்ப. ஆக்சுவலி உனக்கு கிஸ் குடுக்கறதுக்கு கஷ்டமா தான் இருந்து. ஆனா, நீ அப்டியே என்னோட நெஞ்சுல சாஞ்சா உன் உயரம்  சரியா இருக்கும். நீ இன்னும் வளரனும்.


                 "ஐ'ம் லிவிங் ப்ரியா!"ன்னு சொல்லிட்டே செக்யுரிட்டி செக் பண்ண போனேன். முடிஞ்சுது... போர்டிங் பே'ல உக்காராம அந்த பக்கம் நீ நிக்கிறத பாத்துட்டு இருந்தேன்.

                 இப்பவே திரும்ப வந்துடலாம்னு தோனுச்சு... ஆனா முடியல.. முடியாது.. ஆமா போய் தான் ஆகணும். இது தான் உங்க அப்பா பேசுனதுக்கு எல்லாம் பதில். அவருக்கு இப்ப சந்தோசமா இருக்கலாம். நாம ரெண்டு பெரும் பிரிஞ்சு இருக்க போறோம்ல.

               எனக்கு பயமே இல்ல.. இந்த சான்ஸ யூஸ் பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. உன்னோட அனுமதி இல்லாம என்னோட நிழல் கூட உன்ன டச் பண்ண முடியாது. அப்டி இருக்கும் போது நான் எதுக்கு பயப்படனும். நாடோடிகள்'ல  வர்ற அப்பா போல மிரட்டினா , நீ பருத்திவீரன்'ல வர்ற ப்ரியாமணி மாதிரி பேச மாட்டேனாலும், பிரச்சனைய சமாளிக்க கூடிய  சாதுர்யம் உண்ட இருக்கு.

               ரெண்டு பேருக்கும் 20 அடி தான் டிஸ்டன்ஸ். ஆனாலும் ரொம்ப தூரம் தள்ளி போயிட்ட  மாதிரி இருந்தது. உன்னோட இடது கண்'ல இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் விழுந்தது ஞாபகம் இருக்கு . உன்ன அப்டி பாக்க பிடிகல எனக்கு.

                 "ஒரு தடவ போயிட்டு வந்துடறேன்னு" சொன்னா இந்த சர்தார் போலிஸ்காரர் என்ன சொல்வார்னு தெரியாது. அப்டி கேட்டா விட கூடாதானு தோனுச்சு.

                  கேட்டேன்... முடியாது'ன்னு சொல்லிட்டார். உலகத்துல இருக்கற ஒட்டுமொத தலப்பா கட்டின சர்தார் மேலையும் கோபம் வந்துச்சு.

                கடைசில காத்துலயே  "ஐ மிஸ் யூ" னு சொன்னேன். நீயும்  பதிலுக்கு "மீ டூ"ன்னு  சொன்ன. சைகைளையும் வாய் அசைவுளயும்  ஏதேதோ பேசிகிட்டோம். பெருவிரலையும், சுண்டுவிரலையும் நீட்டி மத்த விரல மடக்கி காதுகிட்ட வச்சு லேன்ட் ஆனதும் போன் பண்ண சொன்ன.



                  இது என்ன ரெஸ்ட்றிக்டியன் , ப்ளைட்ல போன் பேசகூடாது'ன்னு... வாட் டெக்னாலாஜி, வாட் சென்ட்ரல் கவர்மன்ட், வாட் ஸ்டேட் கவர்மன்ட்.



                  ஏதோ உண்ட சொல்ல வர கைய விரிச்ச போது, அந்த சர்தார் போலிஸ் மேல தடார்னு பட்டுடுச்சு. மனுசர் இந்தில முறைச்சுட்டு இந்திலயே சொன்னார், "பீச்சே சல்.. சேர் பர் பைட் ஜா...  "

                  "சாரி சர்.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்"னு சொல்லிடு அங்கயே நின்னேன்.

(பகுதி II முற்றும்.... தொடரும்...) 

தில்லி நகரம் உறங்கும் போது... (பகுதி I )

"நாம பிரிஞ்சு இருந்தா, அவர் ரிலேசன் வில் கைய்ன் பாண்ட் ப்ரியா. இன்னும் ஒன்னர ரெண்டு வருஷம் தான், கண்ண மூடி கண்ண திறக்கறதுக்குள்ள ஓடிடும். நான் எங்க வெளிநாட்டுக்கா போகப் போறேன். தில்லிக்கு தான. நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.

உனக்கு இங்க நிறையா வேலை இருக்கு. உன்ன நம்பி ஒரு NGO மட்டும் இல்ல, யூ ஆர் டூயிங் சம்திங் பார் தி எர்த். தட்ஸ் வை ஐ லைக் யூ அண்ட் லவ் யூ. பிகாஸ், யூ லவ் அண்ட் கேர் பார் எர்த் லைக் மீ. இதே போல நல்ல ஒரு ஆபர்ச்சுனிட்டி அங்க உனக்கு கிடைக்கும்னு நிச்சயம் சொல்ல முடியாது.

உன்ன கூட்டிட்டு போக எனக்கு ஓகே தான். எங்க அம்மா அப்பாவும் ஓகே சொல்லிட்டாங்க.... நீ இங்க இருந்தா தேன்மொழிய பாத்துக்குவ... அவள அங்க வரைக்கும் கூட்டிட்டு போக முடியாதுனு நீதான சொன்ன.

கார்ல வரும் போது என் தோள்ல சாஞ்சு அழுதுட்டே வந்து என்னையும் டைவர்ட் பண்ணிட்ட.... என் ஷர்ட் ஈரமாற அளவா அழறது. என்னாலையும் அழறத கண்ட்ரோல் பண்ண முடியாம ரெஸ்ட் ரூம் போய் அழுதுட்டு வர்றேன்.

எனக்கு மட்டும் உன்ன பிரிஞ்சு போறதுல இஷ்டமா என்னடா.. சென்னைல என்னோட ப்ரொபைலுக்கு வேலை கிடைக்கல. நீ தான இந்த ஓப்பனிங் பத்தி என்னட சொன்ன... நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்னு தோணுது... அதான் என்னோட மாமனார் நிறையா சம்பாதிச்சு வச்சிருக்கார்ல நான் வேற சம்பாதிக்கனுமானு கேட்டதுக்கு, உத்தியோகம் புருஷ லட்சனம்னு சொல்லிட்ட.

நீ சொன்ன மாதிரி புது கம்பெனில உன்னோட செக் லிஸ்ட் படி கிரீன் இனிசியேடிவ் எடுக்குறேன். முடியாதுனு சொன்னாங்கனா தொடரும் ப்ளைட்ட பிடுச்சு சென்னை வந்து ஒட்டிக்கிறேன் ஓகேவா"

கடைசியா இப்டி சொன்னதுக்கு அப்புறம் தான் ப்ரியா உன் முகத்துல சிரிப்ப பாக்க முடிஞ்சது.

இப்டி பேசிகிட்டே செக்கின் கவ்ண்டர்ல டிக்கட்ட குடுத்து போர்டிங் பாச வாங்கிட்டேன். உன் அப்பா கஸ்டம்ஸ்ல சீனியர் ஆபிசர். அதனால அவரோட இன்ப்ளுயன்ஸ யூஸ் பண்ணி செக்குரிட்டி செக் வரைக்கும் உன்ன அனுப்பிவச்சார். நான் போறது உங்க அப்பாக்கு பிடிக்கலையா பிடிச்சதானு அவருக்கு மட்டும்தான் தெரியும். மனுஷன் எதையுமே வெளி காம்பிச்சுக்க மாட்டார். என்ன வீட்டோட மாப்பிள்ளை ஆகறது தான் அவரோட ஸ்ட்ரேட்டஜி.

ப்ளைட்டுக்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. அடுத்து செக்யூரிட்டி செக். அப்றம் போர்டிங். ட்ரான்சிட் பே'ல சேர் காலியா இருந்தும் உக்காராம எதிரேதிர்ல நின்னு உன் கண்ண நான் பாத்துட்டு இருந்தேன். என் கண்ண நீ பாத்துட்டு இருந்த. "உன் வலது கையில் பத்து விரல் என் இடது கையில் பத்து விரல்"னு ரெண்டு பெரும் கை கோர்த்து இருந்தோம்.

பத்து நிமிசம் இருக்கும். "எக்ஸ்க்யூஸ்மீ சார், யூ ஆர் கெஸ்ட் ஆப் கிங்க்பிஷர் ?" கோட் ஷர்ட் போட்ட ஒருத்தன் வந்து கேட்டான். அப்ப தான் ரெண்டு பேரும் விழி சுழல்ல இருந்து மீள முடியாம வெளிய வந்தோம். அவன பாத்து நான் முறச்சதுல அவன் நிச்சயம் பயந்திருக்கனும்.

"நோ, ஏர் இண்டியா"னு நீ சொன்னா. அப்றம் அவன் போய்ட்டான்.
உங்க அப்பா கிங்க்பிஷர்'ல புக் பண்ண பாத்தார், நான் தான் ஏர் இண்டியா பெயில் அவுட் ஆயிடுச்சு.. ஏதோ நம்மால முடிஞ்சத செய்வோம்னு சொன்னேன். நீ இன்ஸ்டண்டா அப்ரிசியேட் பண்ணின. நீ எனக்கு கிடைக்க நிறையா குடுத்து வச்சிருப்பேன்னு நினைக்கிறன்.

யூ ஆர் சோ லவ்லி, ப்ரியா. திரும்ப ரெண்டு பெரும் விழி சுழல்ல குதிச்சோம். உன் வலது கன்னத்தில சரிஞ்சு இருந்த ஒத்த முடி'ய என்னோட இடது கை சுண்டு விரலால விளக்கி விட்டேன். "உலகத்தின் கடைசி நாள்... இன்று தானோ என்பது போல்... பேசி பேசி தீர்ந்த பின்னும் ... ஏதோ ஒன்று குறையுதே" அந்த பாட்டுல வர்ற பீளிங்க்ஸ் தான் ரெண்டு பேருக்கும். உன்னோட முகத்த பிக்சல் பை பிக்சலா பாத்தேன்.

ஒரு அஞ்சு நிமிசம் தான் இருக்கும். "அவர் லாஸ்ட் அண்ட் பைனல் போர்டிங் கால் பார் ஏர் இந்தியா IC440 .... " அப்டினு அனவுன்ஸ்மண்ட் வந்தது.

கடைசியா, நீ உன்னோட கண்ணால கேட்டத, நான் என்னோட கண்ணால கேட்டு, என் உதட்டால குடுத்தேன். அதுவும் உன் கன்னத்தில மட்டும் இல்ல... அப்றம் போன்ல நல்லா திட்டின. "ஒரு டீசன்சி வேணாமா... பப்ளிக் ப்ளேஸ்ல இப்டியா... நான் சென்ஸ்... நான் கேட்டா உடனே குத்துடுவியா.. அறிவு வேணாம்... இது இன்னும் சென்னை தான் பிரன்ச் கிஸ் குடுக்கற அளவு முன்னேறல.. " இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியாது...

(பகுதி I முற்றும்.... தொடரும்...)

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - -பாரதியார்

1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் வீடுவோம்;பள்ளித்
தலமனைத்தும் கோயில்செய்குவோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்;
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

5. சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்குநல்லியற்
கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

8. பட்டினியில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

9. ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்.
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் (பாரத)

10. குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

11. மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தில் கண்டுதெளிவோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

12. காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்லருலை வளர்ப்போம்;
ஒவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய்வோம்;
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றேத
மிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர். (பாரத)

செந்தமிழ் நாடெனும் போதினிலே --பாரதியார்

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி என
மேவிய யாறு பலவோடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்தில் நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்லித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம் எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம் இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)