கனவிலே கவிதை எழுதுகிறேன்

கனவிலே கவிதை எழுதுகிறேன்.
பேனா இல்லாமல், காகிதம் இல்லாமல்.
கவிதைக்கு பொய் அழகுதான்.
இந்தக்கவிதையும் அழகுதான்; ஆனால் பொய் இல்லை.

என்னே அருமையானக் கவிதை?!!
என்னால் எழுதப்பட்டதா, இக்கவிதை ?!
எனக்கே உரியதா, இக்கவிதை ?!
என் பெயருக்கு முன்னால் முழுமை பெறுவதா, இக்கவிதை ?!

ஆனால், விடிந்தவுடன் மறந்துவிடுகிறேன் இக்கவிதையை; உன்னை!!
கனவில் மட்டும் தான் வருவயோ ?!!
கவிதை வருவதனால், அதுவும் கனவில் மட்டும் வருவதனால்,
பகலிலும் கனவுகாணத் துணிகிறேன்.

ஆதலால், என் பகல்களைக் கொல்லாதே!
நினைவிலும் வந்துவிடு; முழு மதி காட்டிவிடு!
அச்சில் ஏற்றுவேன் உன்னை,
நம் மண அழைப்பிதழில் கவிதையாய்; உன் பெயர்!.

No comments: