தில்லி நகரம் உறங்கும் போது... (பகுதி I )

"நாம பிரிஞ்சு இருந்தா, அவர் ரிலேசன் வில் கைய்ன் பாண்ட் ப்ரியா. இன்னும் ஒன்னர ரெண்டு வருஷம் தான், கண்ண மூடி கண்ண திறக்கறதுக்குள்ள ஓடிடும். நான் எங்க வெளிநாட்டுக்கா போகப் போறேன். தில்லிக்கு தான. நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.

உனக்கு இங்க நிறையா வேலை இருக்கு. உன்ன நம்பி ஒரு NGO மட்டும் இல்ல, யூ ஆர் டூயிங் சம்திங் பார் தி எர்த். தட்ஸ் வை ஐ லைக் யூ அண்ட் லவ் யூ. பிகாஸ், யூ லவ் அண்ட் கேர் பார் எர்த் லைக் மீ. இதே போல நல்ல ஒரு ஆபர்ச்சுனிட்டி அங்க உனக்கு கிடைக்கும்னு நிச்சயம் சொல்ல முடியாது.

உன்ன கூட்டிட்டு போக எனக்கு ஓகே தான். எங்க அம்மா அப்பாவும் ஓகே சொல்லிட்டாங்க.... நீ இங்க இருந்தா தேன்மொழிய பாத்துக்குவ... அவள அங்க வரைக்கும் கூட்டிட்டு போக முடியாதுனு நீதான சொன்ன.

கார்ல வரும் போது என் தோள்ல சாஞ்சு அழுதுட்டே வந்து என்னையும் டைவர்ட் பண்ணிட்ட.... என் ஷர்ட் ஈரமாற அளவா அழறது. என்னாலையும் அழறத கண்ட்ரோல் பண்ண முடியாம ரெஸ்ட் ரூம் போய் அழுதுட்டு வர்றேன்.

எனக்கு மட்டும் உன்ன பிரிஞ்சு போறதுல இஷ்டமா என்னடா.. சென்னைல என்னோட ப்ரொபைலுக்கு வேலை கிடைக்கல. நீ தான இந்த ஓப்பனிங் பத்தி என்னட சொன்ன... நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்னு தோணுது... அதான் என்னோட மாமனார் நிறையா சம்பாதிச்சு வச்சிருக்கார்ல நான் வேற சம்பாதிக்கனுமானு கேட்டதுக்கு, உத்தியோகம் புருஷ லட்சனம்னு சொல்லிட்ட.

நீ சொன்ன மாதிரி புது கம்பெனில உன்னோட செக் லிஸ்ட் படி கிரீன் இனிசியேடிவ் எடுக்குறேன். முடியாதுனு சொன்னாங்கனா தொடரும் ப்ளைட்ட பிடுச்சு சென்னை வந்து ஒட்டிக்கிறேன் ஓகேவா"

கடைசியா இப்டி சொன்னதுக்கு அப்புறம் தான் ப்ரியா உன் முகத்துல சிரிப்ப பாக்க முடிஞ்சது.

இப்டி பேசிகிட்டே செக்கின் கவ்ண்டர்ல டிக்கட்ட குடுத்து போர்டிங் பாச வாங்கிட்டேன். உன் அப்பா கஸ்டம்ஸ்ல சீனியர் ஆபிசர். அதனால அவரோட இன்ப்ளுயன்ஸ யூஸ் பண்ணி செக்குரிட்டி செக் வரைக்கும் உன்ன அனுப்பிவச்சார். நான் போறது உங்க அப்பாக்கு பிடிக்கலையா பிடிச்சதானு அவருக்கு மட்டும்தான் தெரியும். மனுஷன் எதையுமே வெளி காம்பிச்சுக்க மாட்டார். என்ன வீட்டோட மாப்பிள்ளை ஆகறது தான் அவரோட ஸ்ட்ரேட்டஜி.

ப்ளைட்டுக்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. அடுத்து செக்யூரிட்டி செக். அப்றம் போர்டிங். ட்ரான்சிட் பே'ல சேர் காலியா இருந்தும் உக்காராம எதிரேதிர்ல நின்னு உன் கண்ண நான் பாத்துட்டு இருந்தேன். என் கண்ண நீ பாத்துட்டு இருந்த. "உன் வலது கையில் பத்து விரல் என் இடது கையில் பத்து விரல்"னு ரெண்டு பெரும் கை கோர்த்து இருந்தோம்.

பத்து நிமிசம் இருக்கும். "எக்ஸ்க்யூஸ்மீ சார், யூ ஆர் கெஸ்ட் ஆப் கிங்க்பிஷர் ?" கோட் ஷர்ட் போட்ட ஒருத்தன் வந்து கேட்டான். அப்ப தான் ரெண்டு பேரும் விழி சுழல்ல இருந்து மீள முடியாம வெளிய வந்தோம். அவன பாத்து நான் முறச்சதுல அவன் நிச்சயம் பயந்திருக்கனும்.

"நோ, ஏர் இண்டியா"னு நீ சொன்னா. அப்றம் அவன் போய்ட்டான்.
உங்க அப்பா கிங்க்பிஷர்'ல புக் பண்ண பாத்தார், நான் தான் ஏர் இண்டியா பெயில் அவுட் ஆயிடுச்சு.. ஏதோ நம்மால முடிஞ்சத செய்வோம்னு சொன்னேன். நீ இன்ஸ்டண்டா அப்ரிசியேட் பண்ணின. நீ எனக்கு கிடைக்க நிறையா குடுத்து வச்சிருப்பேன்னு நினைக்கிறன்.

யூ ஆர் சோ லவ்லி, ப்ரியா. திரும்ப ரெண்டு பெரும் விழி சுழல்ல குதிச்சோம். உன் வலது கன்னத்தில சரிஞ்சு இருந்த ஒத்த முடி'ய என்னோட இடது கை சுண்டு விரலால விளக்கி விட்டேன். "உலகத்தின் கடைசி நாள்... இன்று தானோ என்பது போல்... பேசி பேசி தீர்ந்த பின்னும் ... ஏதோ ஒன்று குறையுதே" அந்த பாட்டுல வர்ற பீளிங்க்ஸ் தான் ரெண்டு பேருக்கும். உன்னோட முகத்த பிக்சல் பை பிக்சலா பாத்தேன்.

ஒரு அஞ்சு நிமிசம் தான் இருக்கும். "அவர் லாஸ்ட் அண்ட் பைனல் போர்டிங் கால் பார் ஏர் இந்தியா IC440 .... " அப்டினு அனவுன்ஸ்மண்ட் வந்தது.

கடைசியா, நீ உன்னோட கண்ணால கேட்டத, நான் என்னோட கண்ணால கேட்டு, என் உதட்டால குடுத்தேன். அதுவும் உன் கன்னத்தில மட்டும் இல்ல... அப்றம் போன்ல நல்லா திட்டின. "ஒரு டீசன்சி வேணாமா... பப்ளிக் ப்ளேஸ்ல இப்டியா... நான் சென்ஸ்... நான் கேட்டா உடனே குத்துடுவியா.. அறிவு வேணாம்... இது இன்னும் சென்னை தான் பிரன்ச் கிஸ் குடுக்கற அளவு முன்னேறல.. " இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியாது...

(பகுதி I முற்றும்.... தொடரும்...)

3 comments:

malaithuliyin siragugal! said...

sj surya storyayum,gowtham vasudevan storyayum kalantha mathiri iruku.....................unaku nala future iruku tambi.............

Sateesh said...

thanku akka :)

sriram said...

I liked the writing style da. Its quite fresh even if with traces of Gautham as seen in a comment here - awaiting your next parts. Keep writing and you never know!