தில்லி நகரம் உறங்கும் போது... (பகுதி I )

"நாம பிரிஞ்சு இருந்தா, அவர் ரிலேசன் வில் கைய்ன் பாண்ட் ப்ரியா. இன்னும் ஒன்னர ரெண்டு வருஷம் தான், கண்ண மூடி கண்ண திறக்கறதுக்குள்ள ஓடிடும். நான் எங்க வெளிநாட்டுக்கா போகப் போறேன். தில்லிக்கு தான. நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.

உனக்கு இங்க நிறையா வேலை இருக்கு. உன்ன நம்பி ஒரு NGO மட்டும் இல்ல, யூ ஆர் டூயிங் சம்திங் பார் தி எர்த். தட்ஸ் வை ஐ லைக் யூ அண்ட் லவ் யூ. பிகாஸ், யூ லவ் அண்ட் கேர் பார் எர்த் லைக் மீ. இதே போல நல்ல ஒரு ஆபர்ச்சுனிட்டி அங்க உனக்கு கிடைக்கும்னு நிச்சயம் சொல்ல முடியாது.

உன்ன கூட்டிட்டு போக எனக்கு ஓகே தான். எங்க அம்மா அப்பாவும் ஓகே சொல்லிட்டாங்க.... நீ இங்க இருந்தா தேன்மொழிய பாத்துக்குவ... அவள அங்க வரைக்கும் கூட்டிட்டு போக முடியாதுனு நீதான சொன்ன.

கார்ல வரும் போது என் தோள்ல சாஞ்சு அழுதுட்டே வந்து என்னையும் டைவர்ட் பண்ணிட்ட.... என் ஷர்ட் ஈரமாற அளவா அழறது. என்னாலையும் அழறத கண்ட்ரோல் பண்ண முடியாம ரெஸ்ட் ரூம் போய் அழுதுட்டு வர்றேன்.

எனக்கு மட்டும் உன்ன பிரிஞ்சு போறதுல இஷ்டமா என்னடா.. சென்னைல என்னோட ப்ரொபைலுக்கு வேலை கிடைக்கல. நீ தான இந்த ஓப்பனிங் பத்தி என்னட சொன்ன... நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்னு தோணுது... அதான் என்னோட மாமனார் நிறையா சம்பாதிச்சு வச்சிருக்கார்ல நான் வேற சம்பாதிக்கனுமானு கேட்டதுக்கு, உத்தியோகம் புருஷ லட்சனம்னு சொல்லிட்ட.

நீ சொன்ன மாதிரி புது கம்பெனில உன்னோட செக் லிஸ்ட் படி கிரீன் இனிசியேடிவ் எடுக்குறேன். முடியாதுனு சொன்னாங்கனா தொடரும் ப்ளைட்ட பிடுச்சு சென்னை வந்து ஒட்டிக்கிறேன் ஓகேவா"

கடைசியா இப்டி சொன்னதுக்கு அப்புறம் தான் ப்ரியா உன் முகத்துல சிரிப்ப பாக்க முடிஞ்சது.

இப்டி பேசிகிட்டே செக்கின் கவ்ண்டர்ல டிக்கட்ட குடுத்து போர்டிங் பாச வாங்கிட்டேன். உன் அப்பா கஸ்டம்ஸ்ல சீனியர் ஆபிசர். அதனால அவரோட இன்ப்ளுயன்ஸ யூஸ் பண்ணி செக்குரிட்டி செக் வரைக்கும் உன்ன அனுப்பிவச்சார். நான் போறது உங்க அப்பாக்கு பிடிக்கலையா பிடிச்சதானு அவருக்கு மட்டும்தான் தெரியும். மனுஷன் எதையுமே வெளி காம்பிச்சுக்க மாட்டார். என்ன வீட்டோட மாப்பிள்ளை ஆகறது தான் அவரோட ஸ்ட்ரேட்டஜி.

ப்ளைட்டுக்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. அடுத்து செக்யூரிட்டி செக். அப்றம் போர்டிங். ட்ரான்சிட் பே'ல சேர் காலியா இருந்தும் உக்காராம எதிரேதிர்ல நின்னு உன் கண்ண நான் பாத்துட்டு இருந்தேன். என் கண்ண நீ பாத்துட்டு இருந்த. "உன் வலது கையில் பத்து விரல் என் இடது கையில் பத்து விரல்"னு ரெண்டு பெரும் கை கோர்த்து இருந்தோம்.

பத்து நிமிசம் இருக்கும். "எக்ஸ்க்யூஸ்மீ சார், யூ ஆர் கெஸ்ட் ஆப் கிங்க்பிஷர் ?" கோட் ஷர்ட் போட்ட ஒருத்தன் வந்து கேட்டான். அப்ப தான் ரெண்டு பேரும் விழி சுழல்ல இருந்து மீள முடியாம வெளிய வந்தோம். அவன பாத்து நான் முறச்சதுல அவன் நிச்சயம் பயந்திருக்கனும்.

"நோ, ஏர் இண்டியா"னு நீ சொன்னா. அப்றம் அவன் போய்ட்டான்.
உங்க அப்பா கிங்க்பிஷர்'ல புக் பண்ண பாத்தார், நான் தான் ஏர் இண்டியா பெயில் அவுட் ஆயிடுச்சு.. ஏதோ நம்மால முடிஞ்சத செய்வோம்னு சொன்னேன். நீ இன்ஸ்டண்டா அப்ரிசியேட் பண்ணின. நீ எனக்கு கிடைக்க நிறையா குடுத்து வச்சிருப்பேன்னு நினைக்கிறன்.

யூ ஆர் சோ லவ்லி, ப்ரியா. திரும்ப ரெண்டு பெரும் விழி சுழல்ல குதிச்சோம். உன் வலது கன்னத்தில சரிஞ்சு இருந்த ஒத்த முடி'ய என்னோட இடது கை சுண்டு விரலால விளக்கி விட்டேன். "உலகத்தின் கடைசி நாள்... இன்று தானோ என்பது போல்... பேசி பேசி தீர்ந்த பின்னும் ... ஏதோ ஒன்று குறையுதே" அந்த பாட்டுல வர்ற பீளிங்க்ஸ் தான் ரெண்டு பேருக்கும். உன்னோட முகத்த பிக்சல் பை பிக்சலா பாத்தேன்.

ஒரு அஞ்சு நிமிசம் தான் இருக்கும். "அவர் லாஸ்ட் அண்ட் பைனல் போர்டிங் கால் பார் ஏர் இந்தியா IC440 .... " அப்டினு அனவுன்ஸ்மண்ட் வந்தது.

கடைசியா, நீ உன்னோட கண்ணால கேட்டத, நான் என்னோட கண்ணால கேட்டு, என் உதட்டால குடுத்தேன். அதுவும் உன் கன்னத்தில மட்டும் இல்ல... அப்றம் போன்ல நல்லா திட்டின. "ஒரு டீசன்சி வேணாமா... பப்ளிக் ப்ளேஸ்ல இப்டியா... நான் சென்ஸ்... நான் கேட்டா உடனே குத்துடுவியா.. அறிவு வேணாம்... இது இன்னும் சென்னை தான் பிரன்ச் கிஸ் குடுக்கற அளவு முன்னேறல.. " இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியாது...

(பகுதி I முற்றும்.... தொடரும்...)

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - -பாரதியார்

1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் வீடுவோம்;பள்ளித்
தலமனைத்தும் கோயில்செய்குவோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்;
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

5. சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்குநல்லியற்
கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

8. பட்டினியில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

9. ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்.
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் (பாரத)

10. குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

11. மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தில் கண்டுதெளிவோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

12. காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்லருலை வளர்ப்போம்;
ஒவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய்வோம்;
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றேத
மிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர். (பாரத)

செந்தமிழ் நாடெனும் போதினிலே --பாரதியார்

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி என
மேவிய யாறு பலவோடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்தில் நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்லித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம் எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம் இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காதலின் இன்றைய உண்மை

நன்றி : http://www.vinavu.com/2010/03/01/vtv/

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

...

நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.

நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம். இதனால் பிரச்சினைகளை விட்டுவிட்டு காதலைப் பற்றிய மயக்கங்கள், அவஸ்தைகள் அதற்கு தேன்தடவிய பர்கராக தாலாட்டி வருடுகிறது. எங்களோடு படம் பார்த்தவர்கள் இந்த ஜவ்வை எவ்வளவு கேலி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ததுதான் எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல்.

சாதியும், மதமும், வர்க்கமும் சேர்ந்து திருமணத்தின் குற்றவியல் சட்டமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நாட்டில் அந்த அசலான பிரச்சினையைப் பற்றி பேசினால்தான் அது காதல் படம். வி.தா.வ யில் கிறித்தவம், இந்து மதம் எல்லாம் ஒரு பேச்சுக்கு வந்து சென்றாலும் படத்தின் இதயம், காதலின் இனிய அவஸ்தையையே பழைய முரளி படங்களுக்கு இணையாக அலுப்பூட்டும் விதத்தில் சுவாசிக்கிறது.

ஆனால் அலைகளின் கடற்கரை வாழ்க்கையில் இல்லாத அமெரிக்கா, அமெரிக்கர்கள் காறித்துப்பிய கென்டகி சிக்கன் கடை, ஷாப்பிங் மால்கள், செல்பேசி, எஸ்.எம்.எஸ், பளீர் சாலையில் பைக் பயணம் இவைதான் இது போன்ற காதல் படங்கள் வந்தடைந்திருக்கும் பரிணாமம். பா வரிசைப் படங்களில் நிலப்பிரபுத்துவ மேன்மையிலிருந்த காதல் இன்று முதலாளித்துவ முன்னேற்றங்களில் வந்து நிற்கிறதே அன்றி இந்தியாவின் காதல் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிராதரமான ஜீவன் இங்கு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. மேக்கப் இல்லாமல் போராட்டத்தில் உயிர்வாழும் உண்மையான தமிழகக் காதலர்களை சந்திக்க வேண்டுமா? 27.02.10 நக்கீரனின் 24 ஆம் பக்கத்தில் பாருங்கள்.

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

குழந்தைகள், காதல் இரண்டும் மனித குலத்தை உடல்ரீதியாகவும், அதனால் இனரீதியாகவும் நேசிக்கவைக்கும் அடிப்படைத் தூண்டுகோல்கள். ஆனால் அவை இரண்டும் அதன் வெளியை சுயம், தனிமை, வீடு என்ற தளைகளிலிருந்து பரந்த சமூக வெளிக்கு நகர்த்தும் போக்கில்தான் புடம் போடப்படுகின்றது.

காதல் ஒரு மனிதனை அதீதமான பலத்துடன் வாழ்க்கையை விருப்பமாக அணுகுவதற்கு தயார் செய்கிறது. காதலின் உதவியால் மனிதன் தனது சுற்றத்தை முன்னர் பார்த்திராத வகையில் அன்புடன் அணுகுகிறான். அவனுக்கு இதுகாறும் சலித்துப்போயிருந்த வாழ்க்கைத் தடைகள் இப்போது தாண்டுவதற்கு எளிதான விசயங்களாக மாறுகின்றன. ஆனால் காதலின் இந்த மகத்துவ ஆயுள் மிகவும் குறுகியது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

நீயும் நானும் - ஷாப்பிங் மால்

நம்மை கடந்துச் சென்ற அந்த அழகுச் சிலையைக் கண்ட பிறகு...

என்னையே நினைத்துக்கொண்டே துடித்துக்கொண்டிருக்கும்
உன் இதயம் அனுப்பிவைத்த செங்குருதித் துளிகள் ஊறும்
வீணையாகிய நரம்புகள் செல்லும் உன் கரத்தினை
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அழுத்தி-விடுத்து
கரும் அருவியாகிய உன் கூந்தலிலிருந்து சிதறிச்சென்ற
சில மயிர்களை ஊதிகொதி விட்டு
செவி மடல்களை முத்தமிடும் பாணியில் கூறினேன்,
"இன்னிக்கு நீ கொஞ்சம் நிறையா ஹோம்வர்க் செய்யணும்"