519 டீலக்ஸ் பஸ்... நல்லா ஜம்முனு தான் இருக்கு! மெட்ராஸ் வந்ததுல இருந்து இனிக்கு தான் முதல முதல்ல படம் பாக்க வெளியே வர்றேன். ஈதோ மாயாஜாலாம். மல்டிப்லக்ஸ்னு சொன்னாங்க. எப்டி இருக்கும்னு கேட்டதுக்கு போய் பாருன்னு சொன்னாங்க.
ஸ்டாப் வந்திருச்சு... இறங்கி நடக்கனும் போலேயே!!.. சரி நடப்போம். அட.. நிறையா படத்துல பாத்திருக்கேன்!!..உன்னாலே... உன்னாலே... படத்துல வினய் இந்த தூணுக்குப் பின்னால ஒளிஞ்சு நின்னு தான சதாவோட போன் பேசிட்டு இருப்பான். இப்ப அந்த எடத்துல, கிரீன் சர்ட் போட்ட பையன் ஒருத்தன் நிக்கிறானே...சட்ட கலரப் பாரு.. ராமராஜன் மாதிரி! ரீமேக்க இருக்குமோ? கேட்டா பேசன்னு சொல்லுவானுங்க...போன் பேசிட்டு இருக்கானே!! அந்த பக்கம் அவனோட சதா இருப்பாளோ??
ச்ச நான் பாத்த பாத்துட்டான்! ஐய்யயோ இனிமே வச்ச கண்ணு வாங்காம என்னையே பாக்க போறான். அட ... என்ன பாத்தும் பாக்காதது போல இருக்கான்? நல்ல பையன் போல? இல்லாட்டி நாம அவ்வளோ அழகா இல்லியோ? இல்ல.. இல்ல.. அவன் அவனோட ஆளோட பேசிட்டு இருக்கான்...
ஹும். நாமளும் இப்படி எப்ப பேச போறோமோ? எங்க டா இருக்கே நீ?? எப்ப டா வருவே??
எனக்கும் காலம் வரும்.. டேய் கிரீன் சர்ட் அப்பா வச்சுக்குறேன் உன்ன.... இவன வச்சுக்கிட்டு நாம என்ன பண்ண போறோம்? இவன் தான அல்ரெடி என்கேஜ் ஆய்டான்ல!
ஓகே! மகா டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டா!! இங்க டிக்கெட் 120 ரூபாயாம்!! எம்மாடியோவ்! ... இதே எங்க ஊர்ல நாங்க மூணு பேர் படத்துக்கு போனா 120 வராது...சென்னை பயங்கர காஸ்ட்லியா தான் இருக்கு!! சரி... உள்ள போவோம்.... அட மெடல் டிடெக்டர்'லாம்? செக்குரிடியோ?
க்கும்... யாரது.. அந்த கிரீன் டி-சர்ட்... நாயே! நீ அக்கா தங்கச்சியோட பொறகால?... அவங்க பின்னால போய் இடிடா...
நான்: ஸ்டுபிட்!!
மகா: என்னடி ஆச்சு...??
நான் : ஒன்னும் இல்ல... வாடி ..
இதுக்குன்னே வரானுங்க... இவனுக்கு போய் சர்டிபிகேட் குடுத்தேனே....ச்ச மூட் அவுட் பண்ணிட்டான்.
.
.
.
.
.
.
[படம் முடிகிறது]
இப்பலாம் எந்த படத்துலயும் 'வணக்கம்' போட மாட்டாங்களா? சரி கெளம்புவோம்...
ச்ச.. படத்துக்கு வந்ததே வெஸ்ட் .. அந்த கிரீன் டி-சர்ட்.... இடிய ட்.. ச்சே...
மகா: என்னடி... படம் எப்டி...
நான் : வாய மூடிட்டு வாடி...
அம்மா! நல்லா தல வலிக்குது...
ம்ம்ச்... இப்ப எவன்........
டேய் நீயே தானாடா...
நான்: பொருக்கி நாயே! சோற தான திங்கிற...
[சட் என கன்னத்தில் ஒரு அரை விட்டதும், மழை காளான் போல சில சமூக சேவகர்கள் டோஸ் விட்டனர்]
நான்: என்னடா மொறக்கிற.. பண்றதையும் பண்ணிட்டு...
[அனைவரும் கலைந்தனர்]
மகா: ஏய்! என்னடி பண்ணிட்ட.. உன் இடுப்ப தொட்டது இவன் இல்லடி.. அதோ பின்னால திரும்பிடே நடக்குற மாதிரி ஓடுறான்ல.. அந்த தொப்பி போட்டவன் தான்...
நான் : அப்ப இவன் அவனோட பிரண்டா இருப்பன். ஒரு கேங்கா தான்'டி வரானுங்க...உள்ள வரும்போது இவன்.. வெளிய போகும் போது அவன்....
மகா : இல்லடி.. இருக்காது!! அங்க பாரு அவன் பேரன்ஸோட படம் பாக்க வந்திருக்கான். எவனா இருந்தாலும் பேரன்ஸோட இருக்கும் போது இப்டி நடந்துக்க மாட்டான். அவங்கள பாத்தா டீசன்ட் ஆனா பேமிலி மாதிரி இருக்கு...
நான் : அப்டியா சொல்ற? ஆமா.. இருக்கலாம்... ஆனா?
மகா: சரி ... சரி... அப்டியே வா. போய்டலாம்...
அட ஆமா!... சாரி கேக்கணுமா??.. நான் பண்ணினது தப்பு தான்... ஆனா சாரி கேட்டு எனக்கு பழக்கம் இல்லியே...
அடடா! அவங்கள கிராஸ் பண்ணிதான் போகனுமா?அங்க நின்னு எவங்க எல்லாரும் என்னையே பாக்றாங்க...
ஐய்யயோ... அந்த அம்மா யாரு... அந்தப் பையனோட அம்மாவ இருக்குமோ?
என்ன நோக்கி வராங்களே!
அம்மா: என்னம்மா?! என் பையன் என்ன தப்பு செஞ்சான். இவ்ளோ பேருக்கு முன்னால அரஞ்சுட்ட....
ஐய்யயோ... இப்டிலாம் எனக்கு நடந்ததே இல்லையே!!
நான்: ஐயோ! சாரிமா! உங்க பையனுக்கு பதிலா வேற ஒரு பையன்ன அடிச்சுட்டேன்.
அம்மா : ம்ம்ம்!! ??
நான் : சாரி! வேற ஒரு பையனுக்கு பதிலா உங்க பையன்ன அடிச்சுட்டேன்.
அம்மா: அடிக்கிறது தான் உன் வேலையா?? எதுக்காக அடிச்சேன்னு சொல்லு.. அதுவும் நாலு பேருக்கு முன்னால...
நான் : அம்மா! நான் உங்கள இதுக்கு முன்னால எங்கயோ பாத்திருக்கேனோ?
அம்மா: பேச்ச மாத்தாத!! சொல்லு என் அடிச்ச என் பையன?? அவன் உன் கையா பிடிச்சு இழுத்திருந்தாலும் நீ பொது எடத்துல வச்சு அவன அடிச்சது தப்பு தான்...
அடடா! அவன அடிச்சது தப்பே இல்ல!!
நான் : அம்மா நீங்க பாக்யலக்ஷ்மி அக்கா'வோட கசின் சிஸ்டர் தான.... என்ன ஞாபகம் இல்லியா?
அம்மா : பாக்யவ உனக்கு எப்டி தெரியும்??!!
[அப்புறம் பாக்ய அக்காவ எனக்கு எப்டி தெரியும்னு சொன்னேன்
இப்படித்தான் என் காதல் கதை ஆரம்பித்தது!!!]
இப்படிக்கு,
ரம்யா
(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
என் காதல் கதை I - பல்லவி
இன்னிக்கு ஏன் நான் பறக்குற மாதிரி இருக்கு?? இருக்காதா பின்ன, ஊர்ல அப்பாவோட டிவிஎஸ் 50 ய ஓட்டிட்டு, இப்ப புதுசா வாங்குன ஸ்கூட்டி பெப்'ப ஓட்டுறது, பிளைட் ஓட்டுறது மாதிரி தான் இருக்கும். இந்த
துப்பட்டா வேற, பறந்துட்டே இருக்கு...
இன்னிக்கு டீம்ல எல்லார்டையும் சொல்லியாச்சு, ரமா மட்டும் தான் பாக்கி. புதுசா குமார்னு ஒரு பையன் வரப்போறானாம்... அவனடையும் வண்டி வாங்குனத சொல்லிற வேண்டியது தான்.
அப்பா அந்த ஓட்ட வண்டிய செகண்ட்ஸ்ல இன்ஸ்டால்மன்ட்ல வாங்குனதா சொல்வாரு ...
இப்ப ரெடி கேஸ் குடுத்து...................................
ரோட்ல அந்தப் பையன், என்ன பண்றான்...... கிராஸ் பண்ண போறானா? இல்லியா? ........
போறானோ?... இல்ல... போறான்... போறான்... இல்ல... போறான் .... இல்ல... இல்ல .... இல்ல...போறான்.... டேய் நில்லுடா ...
ஐயோ! அம்மா!!!... என்ன ஆச்சு எனக்கு........
அப்பாடா .. என்னக்கு ஒன்னும் ஆகல... கைல தான் ஏதோ ஸ்க்ராச் மாதிரி இருக்கு...ஐயயோ என் அழகே கெட்டு போச்சு...
ஏன் இவங்க சத்தம் போடறாங்க ... அங்க ஏதோ கூட்டம் மாதிரி இருக்கே? ஐய்யயோ அந்த பையன்....
என்னாச்சு அவனுக்கு...
நான் : தள்ளுங்க ... தள்ளுங்க... என்னாச்சு ??!!
ஐய்யயோ கீழ விழுந்து கெடக்கானே....பக்கத்துல போய் பாப்போம்...
முருகா! என்ன ஆச்சு இவனுக்கு?....
[ சற்று முன் தோன்றிய சமூக சேவகர்களிடமிருந்து வசவு கிடைக்கிறது ]
இவங்க என்ன சொன்னாலும் பரவா இல்ல.. என் மேலயும் தப்பு இருக்குல ....
நான் : அண்ணே ஒரு ஆட்டோ கூப்டுங்க
இந்த அண்ணனும் ஆட்டோல வந்தா நல்லா இருக்கும் ...
ஆனா மூணு பேரா ஆட்டோல போக முடியாது... அதுவும் இவன படுக்க வச்சு போகணும்...
விதி ஏன் இப்டி என்னோட விளையாடுது .... கண்டவன எல்லாம் என் மடில படுக்க வச்சு.... கடவுளே...
ச்சே அப்டி நெனக்காத டி... உனக்கு உருப்படியா சைக்கிளே ஓட்ட தெரியாது...
காசு குடுத்து லைசன்ஸ் வாங்கி வண்டி ஓட்டுனா இப்டிதான், சனி பின் சீட்ல ஜம்முனு உக்காந்து வரும்....
இந்த ஆட்டோகாரன் ஏதோ நல்லவனா இருந்ததால வந்துட்டான்... இல்லாட்டி... போலீஸ கேசு அப்டி இப்டினு எதாச்சும் சொல்லி இருப்பாங்க...
இதே மாதிரி வருமே... அட நம்ம 'காக்க காக்க'...
மாயா அண்ட் ஏ.சி.பி அன்புச்செல்வன்.
மாயாக்கு அடி படாம.... அன்புச்செல்வன்' க்கு அடிபட்டிடுச்சு...
அன்புச்செல்வன் ஏன் யுனிபார்ம் போடாம இருக்கார்.
கேப்போமா ?!!
ஸ்டுபிட் கேர்ள்... எந்த நேரத்துல காமடி பண்ற.... இந்த ரண காலத்துலயும்.... ஹும்...
முதல்ல இவனோட சொந்தகாரங்களுக்கு சொல்லுவோம்....பையில மொபைல் இருக்கா? இல்லையே... பேண்ட் பையில வேற தேடணுமா....
ச்சே வேணாம்.... ஆட்டோகாரர் கிட்ட சொல்லி எடுக்க சொல்லுவோம்...
முதல்ல ஹாஸ்பிடல் போவோம்....
.
.
.
.
.
என்ன அட்மிட் பண்ண மாற்றங்களா?...
போலீஸ கேஸ் பயில் பண்ணனுமா?
என்ன சொன்றாங்க இவங்க... ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கார்...
ஆட்டோ காரர் : சார் சட்டம் எல்லாம் மாறிடுச்சு... சட்டப்படி இப்ப கேஸ் பயில் பண்ணனும்னு அவசியம் இல்ல... மொதல்ல டாக்டர கூப்டுங்க... நா பேசறேன்...
அப்டியா ? இது எல்லாம் நமக்கே தெரியாம போச்சு...!!நாட்ல என்ன நடக்குதுன்னு தெரிய மாடிங்குதுப்பா....நமக்கு இத எல்லாம் சொல்றாங்களா??
.
.
.
.
._____
இப்படித் தான் எங்கள் காதல் கதை ஆரம்பித்தது...
இப்படிக்கு,
பல்லவி
(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)
துப்பட்டா வேற, பறந்துட்டே இருக்கு...
இன்னிக்கு டீம்ல எல்லார்டையும் சொல்லியாச்சு, ரமா மட்டும் தான் பாக்கி. புதுசா குமார்னு ஒரு பையன் வரப்போறானாம்... அவனடையும் வண்டி வாங்குனத சொல்லிற வேண்டியது தான்.
அப்பா அந்த ஓட்ட வண்டிய செகண்ட்ஸ்ல இன்ஸ்டால்மன்ட்ல வாங்குனதா சொல்வாரு ...
இப்ப ரெடி கேஸ் குடுத்து...................................
ரோட்ல அந்தப் பையன், என்ன பண்றான்...... கிராஸ் பண்ண போறானா? இல்லியா? ........
போறானோ?... இல்ல... போறான்... போறான்... இல்ல... போறான் .... இல்ல... இல்ல .... இல்ல...போறான்.... டேய் நில்லுடா ...
ஐயோ! அம்மா!!!... என்ன ஆச்சு எனக்கு........
அப்பாடா .. என்னக்கு ஒன்னும் ஆகல... கைல தான் ஏதோ ஸ்க்ராச் மாதிரி இருக்கு...ஐயயோ என் அழகே கெட்டு போச்சு...
ஏன் இவங்க சத்தம் போடறாங்க ... அங்க ஏதோ கூட்டம் மாதிரி இருக்கே? ஐய்யயோ அந்த பையன்....
என்னாச்சு அவனுக்கு...
நான் : தள்ளுங்க ... தள்ளுங்க... என்னாச்சு ??!!
ஐய்யயோ கீழ விழுந்து கெடக்கானே....பக்கத்துல போய் பாப்போம்...
முருகா! என்ன ஆச்சு இவனுக்கு?....
[ சற்று முன் தோன்றிய சமூக சேவகர்களிடமிருந்து வசவு கிடைக்கிறது ]
இவங்க என்ன சொன்னாலும் பரவா இல்ல.. என் மேலயும் தப்பு இருக்குல ....
நான் : அண்ணே ஒரு ஆட்டோ கூப்டுங்க
இந்த அண்ணனும் ஆட்டோல வந்தா நல்லா இருக்கும் ...
ஆனா மூணு பேரா ஆட்டோல போக முடியாது... அதுவும் இவன படுக்க வச்சு போகணும்...
விதி ஏன் இப்டி என்னோட விளையாடுது .... கண்டவன எல்லாம் என் மடில படுக்க வச்சு.... கடவுளே...
ச்சே அப்டி நெனக்காத டி... உனக்கு உருப்படியா சைக்கிளே ஓட்ட தெரியாது...
காசு குடுத்து லைசன்ஸ் வாங்கி வண்டி ஓட்டுனா இப்டிதான், சனி பின் சீட்ல ஜம்முனு உக்காந்து வரும்....
இந்த ஆட்டோகாரன் ஏதோ நல்லவனா இருந்ததால வந்துட்டான்... இல்லாட்டி... போலீஸ கேசு அப்டி இப்டினு எதாச்சும் சொல்லி இருப்பாங்க...
இதே மாதிரி வருமே... அட நம்ம 'காக்க காக்க'...
மாயா அண்ட் ஏ.சி.பி அன்புச்செல்வன்.
மாயாக்கு அடி படாம.... அன்புச்செல்வன்' க்கு அடிபட்டிடுச்சு...
அன்புச்செல்வன் ஏன் யுனிபார்ம் போடாம இருக்கார்.
கேப்போமா ?!!
ஸ்டுபிட் கேர்ள்... எந்த நேரத்துல காமடி பண்ற.... இந்த ரண காலத்துலயும்.... ஹும்...
முதல்ல இவனோட சொந்தகாரங்களுக்கு சொல்லுவோம்....பையில மொபைல் இருக்கா? இல்லையே... பேண்ட் பையில வேற தேடணுமா....
ச்சே வேணாம்.... ஆட்டோகாரர் கிட்ட சொல்லி எடுக்க சொல்லுவோம்...
முதல்ல ஹாஸ்பிடல் போவோம்....
.
.
.
.
.
என்ன அட்மிட் பண்ண மாற்றங்களா?...
போலீஸ கேஸ் பயில் பண்ணனுமா?
என்ன சொன்றாங்க இவங்க... ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கார்...
ஆட்டோ காரர் : சார் சட்டம் எல்லாம் மாறிடுச்சு... சட்டப்படி இப்ப கேஸ் பயில் பண்ணனும்னு அவசியம் இல்ல... மொதல்ல டாக்டர கூப்டுங்க... நா பேசறேன்...
அப்டியா ? இது எல்லாம் நமக்கே தெரியாம போச்சு...!!நாட்ல என்ன நடக்குதுன்னு தெரிய மாடிங்குதுப்பா....நமக்கு இத எல்லாம் சொல்றாங்களா??
.
.
.
.
._____
இப்படித் தான் எங்கள் காதல் கதை ஆரம்பித்தது...
இப்படிக்கு,
பல்லவி
(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)
பிம்பம்
"அவளைக் காண்பதை தன் தினசரி 'வேலைகளில் ஒன்றாக' வைத்திருந்தான் கார்த்திக்" என்று சொன்னால் அது அபத்தம். பேருந்து நிறுத்தத்தில் மதியை காணாமல் அவனால் வேலைக்குச் செல்ல முடியாது. அவளைக் காணாததனால் அலுவகத்திற்கு விடுப்பு எடுத்ததும் உண்டு.
அவன் பிற ஆண்கள், பெண்களை நோட்டம் விடுவதைப் போல அவளைக் காண்பது கிடையாது. அவன் பார்வையில் காதல்... காதல் மட்டும் தான். அவனுக்கு தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெறாத ஒன்றை அவளிடமிருந்து கிடைக்கப் போவதாக உறுதியாக இருந்தான்.
இந்திந்த காரணங்களினால் தாம் காதல் வரவேண்டும் என தமிழ் முன்னோர் எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. அவ்வாறு எழுதி வைத்திருந்தாலும் அவனால் காரணம் கூற இயலாது. எழுதி வைக்காதிருத்தலுக்கு அவர்களையும் நம்மால் குறை கூற இயலாது. பாவம், அவர்களும் அறிந்திருக்க மாட்டார்கள் போல.
பிறக்கும் முன்னே குடிகார தந்தையையும், ஐந்து வயதில் தாயையும் இழந்த அவனுக்கு சாமி கும்பிட கூட எவரும் சொல்லிக் கொடுத்தது கிடையாது.
என்றாவது ஒருநாள் மதியின் அன்பு, பாசம், காதல் கிடைக்கும் என்றிருந்தான், கார்த்திக். இவற்றிற்கும் மேல் ஒன்றுகூட அவன் இறைவனிடம் வேண்டியது இல்லை, அவளைக் கண்ட நாள் முதல் அல்லது அவன் சாமி கும்பிட ஆரம்பித்த நாள் முதல்.
அன்றும், என்றும் போல மதியை கண்டு கொண்டே சாலையை கடக்க முயற்சித்த போது அது நடந்தது. அவன் விழி மூடும் போது, அதன் மணியில் கடைசியாய் பதிந்த பிம்பம் மதியினுடையதாய் தான் இருந்திருக்க வேண்டும்.
அவனுக்காக பதறிய மனம் மதியினுடையதாய் இருந்தது. அவன் தாய் கூட மேல்லோகத்தில் அவனைக் கண்டு இவ்வளவு பதறியிருக்க மாட்டாளோ?.
அன்று இரவு மதியின் தலையணையை அவள் விழி நீர் நனைத்தது. தானும் கொண்டிருந்த வெளிப்படுத்தாத காதலால் தான் அவனுக்கு இந்த கதி என்ற குற்ற உணர்ச்சி அவளை சாகடித்து.
மீண்டும் கண்விழித்த போது அவன் விழியில் விழுந்த பிம்பமும் மதியினுடையதாய் தான் இருந்தது, மறுநாள் காலை மருத்துவமனையில்.
அவன் பிற ஆண்கள், பெண்களை நோட்டம் விடுவதைப் போல அவளைக் காண்பது கிடையாது. அவன் பார்வையில் காதல்... காதல் மட்டும் தான். அவனுக்கு தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெறாத ஒன்றை அவளிடமிருந்து கிடைக்கப் போவதாக உறுதியாக இருந்தான்.
இந்திந்த காரணங்களினால் தாம் காதல் வரவேண்டும் என தமிழ் முன்னோர் எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. அவ்வாறு எழுதி வைத்திருந்தாலும் அவனால் காரணம் கூற இயலாது. எழுதி வைக்காதிருத்தலுக்கு அவர்களையும் நம்மால் குறை கூற இயலாது. பாவம், அவர்களும் அறிந்திருக்க மாட்டார்கள் போல.
பிறக்கும் முன்னே குடிகார தந்தையையும், ஐந்து வயதில் தாயையும் இழந்த அவனுக்கு சாமி கும்பிட கூட எவரும் சொல்லிக் கொடுத்தது கிடையாது.
என்றாவது ஒருநாள் மதியின் அன்பு, பாசம், காதல் கிடைக்கும் என்றிருந்தான், கார்த்திக். இவற்றிற்கும் மேல் ஒன்றுகூட அவன் இறைவனிடம் வேண்டியது இல்லை, அவளைக் கண்ட நாள் முதல் அல்லது அவன் சாமி கும்பிட ஆரம்பித்த நாள் முதல்.
அன்றும், என்றும் போல மதியை கண்டு கொண்டே சாலையை கடக்க முயற்சித்த போது அது நடந்தது. அவன் விழி மூடும் போது, அதன் மணியில் கடைசியாய் பதிந்த பிம்பம் மதியினுடையதாய் தான் இருந்திருக்க வேண்டும்.
அவனுக்காக பதறிய மனம் மதியினுடையதாய் இருந்தது. அவன் தாய் கூட மேல்லோகத்தில் அவனைக் கண்டு இவ்வளவு பதறியிருக்க மாட்டாளோ?.
அன்று இரவு மதியின் தலையணையை அவள் விழி நீர் நனைத்தது. தானும் கொண்டிருந்த வெளிப்படுத்தாத காதலால் தான் அவனுக்கு இந்த கதி என்ற குற்ற உணர்ச்சி அவளை சாகடித்து.
மீண்டும் கண்விழித்த போது அவன் விழியில் விழுந்த பிம்பமும் மதியினுடையதாய் தான் இருந்தது, மறுநாள் காலை மருத்துவமனையில்.
இவ்வகையில்:
சிறுகதை
பழைய மாமல்லபுரம் சாலை
சிறிய முள் ஒன்பதில் இருந்து பத்தை அடையத் துடித்து கொண்டிருந்தது. பெரிய முள் மூன்றை வருடிக் கொண்டிருந்தது.
'சாய் பாபா மெஸ்' என ஆங்கிலத்தில் எழுதி இருப்பது மின் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. ரமேஷ் அன்று அதிகாலை தான் தன் இரண்டு வருட 'ஆன்சைட் பணிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பியிருந்தான். 'இயர் பீஸ்' காதிலும் நிறுவன அடையாள அட்டை பெல்டிலும் இருப்பது அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதை உறுதி செய்தது.
ரமேஷ் மெசிர்குள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பவில்லை . ஏனெனில் அங்கு குழுமிருந்தவர்கள் அநேகர் அவனது துறையினர் தாம். மெச்சில் கிடைக்கும் உணவுகள் 'ஹோம்லி புட்' ஆக இருக்கும். அதனாலே அந்தப் பகுதியில் 'சாய் பாபா மெஸ்' புகழ்.
தன் பையை இறக்கி வைத்து, கை கழுவி விட்டு இருக்கையில் அமர்ந்தான், ரமேஷ். அவன் அங்கு கண்டது. பெயர் அர்ச்சுன் , பத்து வயது குழந்தைத் தொழிலாளி. அனுபவம் இரண்டு மாதம்.
ரமேஷ் கண் முன்னால் மேஜை துடைக்கபட்டது. தோசை 'ஆர்டர்' செய்யப்பட்டது. அரை மனதுடன் அரை தோசையை உண்டு விட்டு கை கழுவினான். மெதுவாக அர்ச்சுனை நோட்டம் விட்டுகொண்டே மீண்டும் மேசைக்கு வந்து அமர்ந்தான். தன் பையில் இருந்து ஒரு கோப்பை(file) எடுத்தான்.
அதில் தன் 'ஆஃப்ஷோர்' அணியினருக்கு வழங்கியது போக சில 'பாரின் சாக்லேட்' இருந்தன. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதற்கு 'போனஸ்' ஆக வாடிக்கையாளர்கள் வழங்கிய 10,000$ க்கான காசோலையும் இருந்தது.
சாக்லேட்'ஐ அர்ச்சுனுக்கு கொடுத்தான். அப்போது அர்ச்சுன் மெஸ் முதலாளியை ஓரக் கண்ணால் பார்த்து, அவர் சம்மதத்தை பெற்றுக் கொண்ட பிறகு சாக்லேட்'ஐ பெற்றான்.
அப்போது ரமேஷ் மகிழ்ந்தான், அர்ஜுனை மகிழ்வித்து. "இந்தக் கோப்பில் இருக்கும் சாக்லேட் மட்டுமல்ல உனக்கு" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடையை கட்டினான் ரமேஷ்.
'சாய் பாபா மெஸ்' என ஆங்கிலத்தில் எழுதி இருப்பது மின் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. ரமேஷ் அன்று அதிகாலை தான் தன் இரண்டு வருட 'ஆன்சைட் பணிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பியிருந்தான். 'இயர் பீஸ்' காதிலும் நிறுவன அடையாள அட்டை பெல்டிலும் இருப்பது அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதை உறுதி செய்தது.
ரமேஷ் மெசிர்குள் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பவில்லை . ஏனெனில் அங்கு குழுமிருந்தவர்கள் அநேகர் அவனது துறையினர் தாம். மெச்சில் கிடைக்கும் உணவுகள் 'ஹோம்லி புட்' ஆக இருக்கும். அதனாலே அந்தப் பகுதியில் 'சாய் பாபா மெஸ்' புகழ்.
தன் பையை இறக்கி வைத்து, கை கழுவி விட்டு இருக்கையில் அமர்ந்தான், ரமேஷ். அவன் அங்கு கண்டது. பெயர் அர்ச்சுன் , பத்து வயது குழந்தைத் தொழிலாளி. அனுபவம் இரண்டு மாதம்.
ரமேஷ் கண் முன்னால் மேஜை துடைக்கபட்டது. தோசை 'ஆர்டர்' செய்யப்பட்டது. அரை மனதுடன் அரை தோசையை உண்டு விட்டு கை கழுவினான். மெதுவாக அர்ச்சுனை நோட்டம் விட்டுகொண்டே மீண்டும் மேசைக்கு வந்து அமர்ந்தான். தன் பையில் இருந்து ஒரு கோப்பை(file) எடுத்தான்.
அதில் தன் 'ஆஃப்ஷோர்' அணியினருக்கு வழங்கியது போக சில 'பாரின் சாக்லேட்' இருந்தன. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதற்கு 'போனஸ்' ஆக வாடிக்கையாளர்கள் வழங்கிய 10,000$ க்கான காசோலையும் இருந்தது.
சாக்லேட்'ஐ அர்ச்சுனுக்கு கொடுத்தான். அப்போது அர்ச்சுன் மெஸ் முதலாளியை ஓரக் கண்ணால் பார்த்து, அவர் சம்மதத்தை பெற்றுக் கொண்ட பிறகு சாக்லேட்'ஐ பெற்றான்.
அப்போது ரமேஷ் மகிழ்ந்தான், அர்ஜுனை மகிழ்வித்து. "இந்தக் கோப்பில் இருக்கும் சாக்லேட் மட்டுமல்ல உனக்கு" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு நடையை கட்டினான் ரமேஷ்.
உனக்கு பிடிச்சிருந்தா…எனக்கும் தான்
தொலைபேசி விடாமல் சிணுங்கியது…. எடுக்க ஆளில்லாமல் அல்ல. அவன் குளியல் அறையிலிருந்து வெளியே வருவதற்கும் மணியடிப்பது நிற்பதற்கும் சரியாய் இருத்தது. இவ்வளவு சீக்கிரம் எழுந்து அவனுக்குப் பழக்கம் இல்லை. அம்மாவின் வற்புறுதலினால் எழுந்தாலும், இன்று திருமணம் என்பதால் உற்சாகமாகிவிட்டான். ஏழு மணிக்குத் திருமணம்.
அவன் கை கடிகார முள் 7।35 எனக் காட்டியது, நேற்று மாலை நிலவரப்படி. பத்து ஆண்டுகளிருக்கும், அவன் பொதுத் தேர்வு எழுத வெறும் கையுடன் செல்வதைக் கண்டு அந்த கடிகாரத்தை அவள் பரிசளித்து. ஆனால் சுவர் கடிகாரம் 4।55 எனக் காட்டியது.
திறந்த மேனியுடன், உடல் முழுக்க நீர் மொட்டுக்களுடன், இடுப்பில் கட்டிய துண்டுடன், தலையைக் கூட காயவிடாமல், சோபாவில் அமர்ந்தான்। இன்று திருமணம் என்றாலும் விழிகள் இரண்டும் அரை நித்திரையில் கரைந்தன.
சில ஞாபகங்கள், சில கொண்டாட்டங்கள், சில துயரங்கள், சில சாதனைகள், சில சோதனைகள், இவ்வாறு பற்சில கண் முன் வந்து சென்றன. கடந்த கால நாட்கள் மொத்தத்தில் இனிமையாகவே தெரிந்தன. குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வாழ்க்கைப்பருவம் ஆகியன அனைத்தும் கடந்து வந்தது அவர்களது பந்தம்.
எதிரெதிர் வீட்டில் குடியிருந்த அவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்। ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவனால் அவளுக்கு அளிக்க முடிந்தது நாளனா ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் மட்டுமே। இன்றும் கூட அதையே கடைபிடிக்கிறான்। அவனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கேக்கை காணமுடிந்தது…॥ ருசிக்கவும் தான்।.
அவர்கள் நெருங்கிப்பழக விதை விதைத்த நிகழ்ச்சி: ஒரே பள்ளியில் படித்த அவர்களுக்கு அன்று பொதுத்தேர்வு। பள்ளிக்கு அவளை விட்டுச்செல்ல வந்த தந்தை, “வாட்சுல மணி சரியா இருக்காமா? ” எனக் கேட்டபோது அவள் நினைவுக்கு வந்தது ‘திருச்செந்தூர் முருகன் கோவில்’ செந்நிற காப்புக்கயிறு மட்டும் கட்டியிருக்கும் அவன் கைகளே।உடனே தந்தையிடம் மன்றாடி, அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை அவனுக்கு பரிசளித்தாள்।இருவரும் படிப்பில் கெட்டி என்றாலும், அவளுக்கு கோவையிலும் அவனுக்கு மதுரையிலும் பட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது।.
இடவேற்றுமையால் பிரிந்திருந்தாலும் மனவொற்றுமையால் சேர்ந்திருந்தனர். அதற்கு மின்னஞ்சல், தொலைபேசி , செல்போன், கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டிகள் ஆகியவை உதவின. வாழும் யுக்திகளை இருவரும் பரிமாறிப் பயின்றனர். கல்லூரி வாழ்வில் இருவரும் பண்பட்டனர்.கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணியமர்த்தப்பட்டனர். இருவரின் எண்ண்ங்களும், திறமையும், வளர்ச்சியும் ஒன்று போல் இருந்தன……இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண் முன் வந்து சென்ற அந்த தருணத்தில்…. க்ரீங்,க்ரீங்…..க்ரீங்,க்ரீங்….. என திரும்பவும் தொலைபேசி மணி அடித்தது. அது வரை உறவாடிக்கொண்டிருந்த இமைகள் இரண்டும் பிரிக்கப்பட்டன.அவன் ரிசீவரை எடுத்தான்…. ஆம்! அவளே தான். .
"என்னடா… எழுந்துட்டியா?… ".
" ஆமா சத்யா, இப்பதான் குளிச்சேன், … குளிச்சிட்டு சோபால உக்காந்து லேசா கண்ணசந்தே…"
" கிறுக்கா! குளிச்சா தொவட்ட மாட்டியா…. கல்யாணத்துல மூக்கு ஒலுகிட்டு யே பக்கத்துல போஸ் குடுக்க போரடா!! ".
" சரி, இத சொல்ல தான் போன் பன்னியா? "
" இல்ல… நா எடுத்து குடுத்த ட்ரஸ் பிடிச்சிருக்கு தான? "
"அதுக்கு என்ன….. உனக்கு பிடிச்சிருந்தா, எனக்குந் தா!"
"அப்றம்ம்… அப்பா சொன்னாரு… அவரு உள்ள வர்றதுக்கு முன்னாடி தங்க செய்ன் போட்டு வரவேற்பாங்களா"
"பொண்ணோட பெறந்த அண்ணன், தம்பி தான் போடுவாங்க….. அதுக்கு நா முன்னாடி நின்னு செய்ன் போட்டு வரவேற்கனும்…. அவ்லொ தான!… "
" டேய்! மதன்னா, மதன் தான்!…… வெரி குட்.. ஓகே… பய் டா…. சீக்கிரம் ஆறு மணிக்கெள்ளா வந்துறு சரியா…. தோ அவர்ட்ட இருந்து கால் வருது….. பய், கால் யூ லேட்டர்…"
" பய்…. ஹெவ் அ குட் டே "
அவன் மதன் என்ற மதன்குமார். அவள் ஜோதி என்ற சத்யஜோதி. இன்றைய மகிழ்ச்சி எண்ணியைத் தொடக்கிவைத்து ரிசீவரை வைத்தான். மெத்தை மீது அவளுக்கு பிடித்த, அவனுக்கு பொருத்தமான மெரூன் நிற சர்ட்டும், சான்ட்ல் நிற பேண்டும் மஞ்சளிட காத்திருந்தன.
மதனும் ஜோதியும் நண்பர்கள். இதை மனதில் கொண்டு திரும்ப ஒருமுறை இக்கதையை வாசியுங்கள்... என்ன உலகமடா இது!!
அவன் கை கடிகார முள் 7।35 எனக் காட்டியது, நேற்று மாலை நிலவரப்படி. பத்து ஆண்டுகளிருக்கும், அவன் பொதுத் தேர்வு எழுத வெறும் கையுடன் செல்வதைக் கண்டு அந்த கடிகாரத்தை அவள் பரிசளித்து. ஆனால் சுவர் கடிகாரம் 4।55 எனக் காட்டியது.
திறந்த மேனியுடன், உடல் முழுக்க நீர் மொட்டுக்களுடன், இடுப்பில் கட்டிய துண்டுடன், தலையைக் கூட காயவிடாமல், சோபாவில் அமர்ந்தான்। இன்று திருமணம் என்றாலும் விழிகள் இரண்டும் அரை நித்திரையில் கரைந்தன.
சில ஞாபகங்கள், சில கொண்டாட்டங்கள், சில துயரங்கள், சில சாதனைகள், சில சோதனைகள், இவ்வாறு பற்சில கண் முன் வந்து சென்றன. கடந்த கால நாட்கள் மொத்தத்தில் இனிமையாகவே தெரிந்தன. குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வாழ்க்கைப்பருவம் ஆகியன அனைத்தும் கடந்து வந்தது அவர்களது பந்தம்.
எதிரெதிர் வீட்டில் குடியிருந்த அவர்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்। ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவனால் அவளுக்கு அளிக்க முடிந்தது நாளனா ஆரஞ்சு புளிப்பு மிட்டாய் மட்டுமே। இன்றும் கூட அதையே கடைபிடிக்கிறான்। அவனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கேக்கை காணமுடிந்தது…॥ ருசிக்கவும் தான்।.
அவர்கள் நெருங்கிப்பழக விதை விதைத்த நிகழ்ச்சி: ஒரே பள்ளியில் படித்த அவர்களுக்கு அன்று பொதுத்தேர்வு। பள்ளிக்கு அவளை விட்டுச்செல்ல வந்த தந்தை, “வாட்சுல மணி சரியா இருக்காமா? ” எனக் கேட்டபோது அவள் நினைவுக்கு வந்தது ‘திருச்செந்தூர் முருகன் கோவில்’ செந்நிற காப்புக்கயிறு மட்டும் கட்டியிருக்கும் அவன் கைகளே।உடனே தந்தையிடம் மன்றாடி, அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை அவனுக்கு பரிசளித்தாள்।இருவரும் படிப்பில் கெட்டி என்றாலும், அவளுக்கு கோவையிலும் அவனுக்கு மதுரையிலும் பட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது।.
இடவேற்றுமையால் பிரிந்திருந்தாலும் மனவொற்றுமையால் சேர்ந்திருந்தனர். அதற்கு மின்னஞ்சல், தொலைபேசி , செல்போன், கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டிகள் ஆகியவை உதவின. வாழும் யுக்திகளை இருவரும் பரிமாறிப் பயின்றனர். கல்லூரி வாழ்வில் இருவரும் பண்பட்டனர்.கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணியமர்த்தப்பட்டனர். இருவரின் எண்ண்ங்களும், திறமையும், வளர்ச்சியும் ஒன்று போல் இருந்தன……இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண் முன் வந்து சென்ற அந்த தருணத்தில்…. க்ரீங்,க்ரீங்…..க்ரீங்,க்ரீங்….. என திரும்பவும் தொலைபேசி மணி அடித்தது. அது வரை உறவாடிக்கொண்டிருந்த இமைகள் இரண்டும் பிரிக்கப்பட்டன.அவன் ரிசீவரை எடுத்தான்…. ஆம்! அவளே தான். .
"என்னடா… எழுந்துட்டியா?… ".
" ஆமா சத்யா, இப்பதான் குளிச்சேன், … குளிச்சிட்டு சோபால உக்காந்து லேசா கண்ணசந்தே…"
" கிறுக்கா! குளிச்சா தொவட்ட மாட்டியா…. கல்யாணத்துல மூக்கு ஒலுகிட்டு யே பக்கத்துல போஸ் குடுக்க போரடா!! ".
" சரி, இத சொல்ல தான் போன் பன்னியா? "
" இல்ல… நா எடுத்து குடுத்த ட்ரஸ் பிடிச்சிருக்கு தான? "
"அதுக்கு என்ன….. உனக்கு பிடிச்சிருந்தா, எனக்குந் தா!"
"அப்றம்ம்… அப்பா சொன்னாரு… அவரு உள்ள வர்றதுக்கு முன்னாடி தங்க செய்ன் போட்டு வரவேற்பாங்களா"
"பொண்ணோட பெறந்த அண்ணன், தம்பி தான் போடுவாங்க….. அதுக்கு நா முன்னாடி நின்னு செய்ன் போட்டு வரவேற்கனும்…. அவ்லொ தான!… "
" டேய்! மதன்னா, மதன் தான்!…… வெரி குட்.. ஓகே… பய் டா…. சீக்கிரம் ஆறு மணிக்கெள்ளா வந்துறு சரியா…. தோ அவர்ட்ட இருந்து கால் வருது….. பய், கால் யூ லேட்டர்…"
" பய்…. ஹெவ் அ குட் டே "
அவன் மதன் என்ற மதன்குமார். அவள் ஜோதி என்ற சத்யஜோதி. இன்றைய மகிழ்ச்சி எண்ணியைத் தொடக்கிவைத்து ரிசீவரை வைத்தான். மெத்தை மீது அவளுக்கு பிடித்த, அவனுக்கு பொருத்தமான மெரூன் நிற சர்ட்டும், சான்ட்ல் நிற பேண்டும் மஞ்சளிட காத்திருந்தன.
மதனும் ஜோதியும் நண்பர்கள். இதை மனதில் கொண்டு திரும்ப ஒருமுறை இக்கதையை வாசியுங்கள்... என்ன உலகமடா இது!!
Subscribe to:
Posts (Atom)