"இம்முறையும் ஓங்கி அழுதேன் ...
கேட்கக் கூடிய தூரத்தில் நீ இல்லை ...
என் தலையணை மட்டுமே அறிந்திருக்கும் இதனை ...
வேறு சாட்சி ஏதும் இல்லை ...
பாவம் அதுவென்ன செய்யும் ...
வெண் விழியிற் செறியும்
நீர் துளிகளை உறுஞ்சுவதைத் தவிர ...
பார்! அதுகூட என் கண்ணீரை
துடைக்க முற்படுகிறது.... "
இவ்வாறு எழுதினான் காதலி இல்லாத
தனியொருவன் தன் டைரியில்.
Showing posts with label சில வரிகளில். Show all posts
Showing posts with label சில வரிகளில். Show all posts
ஒன்று தான்...
ஓர் பெண்ணைக் கற்பழித்து,
கைவிடும் ஆணும்.
ஓர் ஆணைக் காதலித்து,
கைவிடும் பெண்ணும்.
கைவிடும் ஆணும்.
ஓர் ஆணைக் காதலித்து,
கைவிடும் பெண்ணும்.
இவ்வகையில்:
சில வரிகளில்
எப்படித் தேட??
எனதருகில் நின்று,
என் கண்களைக் கட்டி,
என் கரத்தைப் பிடித்து,
உன்னையே தேடச் சொல்கிறாயே,
தொலைக்க நினைப்பவனிடம்...
என் கண்களைக் கட்டி,
என் கரத்தைப் பிடித்து,
உன்னையே தேடச் சொல்கிறாயே,
தொலைக்க நினைப்பவனிடம்...
இவ்வகையில்:
சில வரிகளில்,
பீலிங்ஸ்
வேறொன்றும் இல்லை
நான் சொல்வதெல்லாம் உண்மை,
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...
நான் சிவம்.
அவள் சக்தி.
என்னில் பாதி அவள்,
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...
நான் சிவம்.
அவள் சக்தி.
என்னில் பாதி அவள்,
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...
இவ்வகையில்:
சில வரிகளில்,
பெண்
சுயம் வரம்
அன்று வெள்ளிக்கிழமை,
சுப முகுர்த்த மாலை வேளை,
அவர்கள் சுயம் வரத்திற்கு
வருகை தந்திருந்தனர்,
தூரத்து தேசத்து (குடி)மன்னர்கள்.
'போதை' எனும் மங்கையை மணப்பதற்கு.
சுப முகுர்த்த மாலை வேளை,
அவர்கள் சுயம் வரத்திற்கு
வருகை தந்திருந்தனர்,
தூரத்து தேசத்து (குடி)மன்னர்கள்.
'போதை' எனும் மங்கையை மணப்பதற்கு.
இவ்வகையில்:
சில வரிகளில்
வைர நெஞ்சம்
அவள் வைர நெஞ்சத்தவள்,
எறும்பு ஊறக் கூட கல் தேயுமாம்!
எறும்பு ஊறக் கூட கல் தேயுமாம்!
இவ்வகையில்:
காதல்,
சில வரிகளில்,
பீலிங்ஸ்
சொல் புதிது பொருள் புதிது
ஒன்றாய் மனம் விடாமல் பேசியிருக்கிறோம்...
ஒன்றாய் வெவ்வேறு தட்டில் சாப்பிட்டுயிருகிறோம்...
கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி ஒன்றாய் நடந்திருக்கிறோம்...
இவ்வாறுதான் நானும் அவளும்...
ஆனாலும் அவள் இன்று கூறிய சொல் புதிது பொருள் புதிது,
"உன்னோட கொஞ்சம் தனியா பேசனும்"
பிகு:அன்பரே! 'பொருளை' நீங்களே நிரப்புங்கள்!!
ஒன்றாய் வெவ்வேறு தட்டில் சாப்பிட்டுயிருகிறோம்...
கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி ஒன்றாய் நடந்திருக்கிறோம்...
இவ்வாறுதான் நானும் அவளும்...
ஆனாலும் அவள் இன்று கூறிய சொல் புதிது பொருள் புதிது,
"உன்னோட கொஞ்சம் தனியா பேசனும்"
பிகு:அன்பரே! 'பொருளை' நீங்களே நிரப்புங்கள்!!
இவ்வகையில்:
சில வரிகளில்
அதைத்தவிர
முன்பெல்லாம்,
ஒரு ரூபாயாவது பிச்சை அளித்த மனம்,
இன்று மறுத்து ஏசுகிறது,
"அதைத்தவிர உன்னால்
வேறென்ன செய்யமுடிந்தது?" என்று.
ஒரு ரூபாயாவது பிச்சை அளித்த மனம்,
இன்று மறுத்து ஏசுகிறது,
"அதைத்தவிர உன்னால்
வேறென்ன செய்யமுடிந்தது?" என்று.
இவ்வகையில்:
சில வரிகளில்,
மனிதம்
முழுக்கு
காதலுக்கு வருகை அளித்து,
சாதிக்கு முழுக்கு அளிப்போம்,
சமூகம் எனும் வகுப்பறையிலே!
சாதிக்கு முழுக்கு அளிப்போம்,
சமூகம் எனும் வகுப்பறையிலே!
இவ்வகையில்:
காதல்,
சில வரிகளில்
இரண்டாம் மணம்
தமிழ்,
தாயாய்,
சகோதரியாய்,
தோழியாய்,
காதலியாய் இருந்தாள்.
இப்போது மனைவியாய் இருக்கிறாள்;
விவாகரத்து தேவையில்லை
இரண்டாம் மணம் புரிய,
தமிழ் எனும்
முதல் மனைவியிடமிருந்து;
தாயாய்,
சகோதரியாய்,
தோழியாய்,
காதலியாய் இருந்தாள்.
இப்போது மனைவியாய் இருக்கிறாள்;
விவாகரத்து தேவையில்லை
இரண்டாம் மணம் புரிய,
தமிழ் எனும்
முதல் மனைவியிடமிருந்து;
இவ்வகையில்:
சில வரிகளில்
வாடிய மலர்
வாடி இருந்த மலரும் அழகாயிருந்தது,
அவள் சூடியமையால்.
அது அழகாய் இருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை போலும்,
ஏனோ அதை அவள் கலைந்து விட்டாள்
அவள் சூடியமையால்.
அது அழகாய் இருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை போலும்,
ஏனோ அதை அவள் கலைந்து விட்டாள்
இவ்வகையில்:
சில வரிகளில்,
பெண்
யாரந்த மலர்
நடுவினிலே மஞ்சளும், அதைச்சுற்றி வெண்மையும்
நிறைந்திருந்த அந்த மலரின்
பெயரை அறிய முடியவில்லை;
அதைச் சூடியிருந்த மலரின்
பெயரையும் தான்.
நிறைந்திருந்த அந்த மலரின்
பெயரை அறிய முடியவில்லை;
அதைச் சூடியிருந்த மலரின்
பெயரையும் தான்.
இவ்வகையில்:
சில வரிகளில்,
பெண்
மூன்றாம் காதல்
அவளைப் பார்த்து இன்புற்று,
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,
"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.
"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,
"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.
"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.
இவ்வகையில்:
காதல்,
சில வரிகளில்
என் இமைக்குள்
ஆண்கள், பெண்களை இமைகளுக்குள் வைத்துப்
பேணத் தவம் இருந்தாலும்,
அவர்கள், 'உன் கண்களுக்குள் இடம் வேண்டாம் எனக்கு',
எனச் சொல்லி, இரும்பு முலாம் பூசிய பொன்மலரின்
மொட்டுக்குள் இடம் தேடி அழைகின்றனர்.
பேணத் தவம் இருந்தாலும்,
அவர்கள், 'உன் கண்களுக்குள் இடம் வேண்டாம் எனக்கு',
எனச் சொல்லி, இரும்பு முலாம் பூசிய பொன்மலரின்
மொட்டுக்குள் இடம் தேடி அழைகின்றனர்.
இவ்வகையில்:
சில வரிகளில்,
பெண்
அவள்
மையிட்ட கருவிழிகளுடன் அவள் அழகாய் சிரித்தாள்,
கண் சிமிட்டி என்னை ரசிக்க வைத்தாள்,
இனிக்க இனிக்க கொஞ்சிப் பேசினாள்,
பேருந்தில், தன் தாய் மடியில் மழலையாய் அவள்....
கண் சிமிட்டி என்னை ரசிக்க வைத்தாள்,
இனிக்க இனிக்க கொஞ்சிப் பேசினாள்,
பேருந்தில், தன் தாய் மடியில் மழலையாய் அவள்....
இவ்வகையில்:
சில வரிகளில்,
பெண்
இரண்டு நிமிடக் காதல்
இரண்டொரு நிமிடத்தில் வரும் காதல்,
ஐந்து நிமிட இன்பத்தை எண்ணியே வருவது;
இரண்டொரு வருடம் நீடித்து காதல் ஆகும்
நட்பை விட அது கேவலமானது.
ஐந்து நிமிட இன்பத்தை எண்ணியே வருவது;
இரண்டொரு வருடம் நீடித்து காதல் ஆகும்
நட்பை விட அது கேவலமானது.
இவ்வகையில்:
காதல்,
சில வரிகளில்
Subscribe to:
Posts (Atom)