என்னடா இது வாழ்க்கை, தினமுன் ஒன்று போலவே இருகிறதே என சலித்து இருந்தபோது இன்று காலை நடந்தது இது...
எப்பவும் போல இன்று காலையும் பேருந்தில் ஏறுவதற்கு எஸ்.ஆர்.பி நிறுத்தத்திற்கு வந்தேன். அந்த மிதவைப் பேருந்து நான் சாலையை கடக்கும் வரை காத்திருந்த பொது எனக்கு சந்தேகம் வரவில்லை.
மட மட என காலை அவசரத்தில் சாலையை கடந்து வந்தவுடன் பேருந்தில் ஏறிவிட்டேன். உள்ளே ஏறியவுடன் இரண்டு பரிசோதனையாளர்கள் பயணிகளின் பயணச்சிட்டுகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
என்னைக் கண்டவுடன், என்னிடமும் பயணச்சிட்டு கேட்கப்பட்டது. நான் பேசும் முன்பே என் அருகிலிருந்தவர் பேசிவிட்டார். அப்போது விவாதம் பின்வருமாறு நடைபெற்றது.
அவர்: அவரு இந்த ஸ்டாப்ல தாங்க ஏறுனாரு .
ப.ப: எப்டிங்க ஏறிருப்பாறு, அதான் சூபர்வைசர் கீல நிக்கிரார்ல.
நான்: வெளிய யாரும் இல்லயே.
அதற்குள் பராக்கு பார்க்க சென்றிருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்த சூபர்வைசர் வாக்குவாதத்தில் கலந்துகொண்டார்.
ப.ப: சார், இந்த ஸ்டாப்ல ஏருனாராம்.. இவரு பாத்தாராம்..
சூ.வ: யாரது..
ப.ப: இவருதான்
சூ.வ: யோவ். உன் வேலைய பாத்துட்டு போயா.
நான்: ஹலோ சார் மரியதையா பேசுங்க... டிக்கெட் செக்கிங்நா வெளிய இருந்து யாரும் ஏறாம பாக்க வேண்டியது தான... இல்ல டோர மூடியிருகலாம்ல...
இவ்வாறு தொடர்ந்த சூடான விவாதம், பிறகு பேருந்து கிளம்ப வேண்டும் என்றபடியால் எப்படியோ முடிவடைந்தது.
இடையில், ஒருவர் "அமைதியா இருங்க சார் பஸ் கெளம்பனும்ல" என்றார்.
"ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது கூட தவறு போல, இவனுக்கு உதவப் போய் நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன்" என அவர்(எனக்கு உதவியவர்) எண்ணியிருப்பார் என நினைத்துக்கொண்டே 'தாங்க்ஸ் பாஸ்' எனக் கூற, அவரோ "உண்மைய சொல்றதுக்கு எதுக்குங்க தாங்க்ஸ் எல்லாம்" எனகூறி ஒரு புன்னகை அழித்தார்.
பேருந்து சென்றுகொண்டிருந்த போதே, இதை எல்லாம் கண்டுகொண்டிருந்த பெண் ஒருத்தி சென்ற வாரம் இதே போல் ஒரு நிகழ்வை தான் கண்டதாகவும், அப்போது எவரும் வேறு எவரும் வாய்திறக்கவில்லை எனவும், தான் சொல்லி எவரும் கேட்கவில்லை எனவும் கூறினாள்.
நல்ல அனுபவமாக இருந்ததாக நினைத்துக்கொண்டேன்.
Showing posts with label பேருந்து. Show all posts
Showing posts with label பேருந்து. Show all posts
Subscribe to:
Posts (Atom)