என் காதல் கதை I - பல்லவி

இன்னிக்கு ஏன் நான் பறக்குற மாதிரி இருக்கு?? இருக்காதா பின்ன, ஊர்ல அப்பாவோட டிவிஎஸ் 50 ய ஓட்டிட்டு, இப்ப புதுசா வாங்குன ஸ்கூட்டி பெப்'ப ஓட்டுறது, பிளைட் ஓட்டுறது மாதிரி தான் இருக்கும். இந்த
துப்பட்டா வேற, பறந்துட்டே இருக்கு...

இன்னிக்கு டீம்ல எல்லார்டையும் சொல்லியாச்சு, ரமா மட்டும் தான் பாக்கி. புதுசா குமார்னு ஒரு பையன் வரப்போறானாம்... அவனடையும் வண்டி வாங்குனத சொல்லிற வேண்டியது தான்.

அப்பா அந்த ஓட்ட வண்டிய செகண்ட்ஸ்ல இன்ஸ்டால்மன்ட்ல வாங்குனதா சொல்வாரு ...
இப்ப ரெடி கேஸ் குடுத்து...................................

ரோட்ல அந்தப் பையன், என்ன பண்றான்...... கிராஸ் பண்ண போறானா? இல்லியா? ........
போறானோ?... இல்ல... போறான்... போறான்... இல்ல... போறான் .... இல்ல... இல்ல .... இல்ல...போறான்.... டேய் நில்லுடா ...

ஐயோ! அம்மா!!!... என்ன ஆச்சு எனக்கு........

அப்பாடா .. என்னக்கு ஒன்னும் ஆகல... கைல தான் ஏதோ ஸ்க்ராச் மாதிரி இருக்கு...ஐயயோ என் அழகே கெட்டு போச்சு...

ஏன் இவங்க சத்தம் போடறாங்க ... அங்க ஏதோ கூட்டம் மாதிரி இருக்கே? ஐய்யயோ அந்த பையன்....

என்னாச்சு அவனுக்கு...

நான் : தள்ளுங்க ... தள்ளுங்க... என்னாச்சு ??!!

ஐய்யயோ கீழ விழுந்து கெடக்கானே....பக்கத்துல போய் பாப்போம்...
முருகா! என்ன ஆச்சு இவனுக்கு?....
[ சற்று முன் தோன்றிய சமூக சேவகர்களிடமிருந்து வசவு கிடைக்கிறது ]

இவங்க என்ன சொன்னாலும் பரவா இல்ல.. என் மேலயும் தப்பு இருக்குல ....

நான் : அண்ணே ஒரு ஆட்டோ கூப்டுங்க

இந்த அண்ணனும் ஆட்டோல வந்தா நல்லா இருக்கும் ...
ஆனா மூணு பேரா ஆட்டோல போக முடியாது... அதுவும் இவன படுக்க வச்சு போகணும்...

விதி ஏன் இப்டி என்னோட விளையாடுது .... கண்டவன எல்லாம் என் மடில படுக்க வச்சு.... கடவுளே...

ச்சே அப்டி நெனக்காத டி... உனக்கு உருப்படியா சைக்கிளே ஓட்ட தெரியாது...
காசு குடுத்து லைசன்ஸ் வாங்கி வண்டி ஓட்டுனா இப்டிதான், சனி பின் சீட்ல ஜம்முனு உக்காந்து வரும்....

இந்த ஆட்டோகாரன் ஏதோ நல்லவனா இருந்ததால வந்துட்டான்... இல்லாட்டி... போலீஸ கேசு அப்டி இப்டினு எதாச்சும் சொல்லி இருப்பாங்க...

இதே மாதிரி வருமே... அட நம்ம 'காக்க காக்க'...
மாயா அண்ட் .சி.பி அன்புச்செல்வன்.
மாயாக்கு அடி படாம.... அன்புச்செல்வன்' க்கு அடிபட்டிடுச்சு...
அன்புச்செல்வன் ஏன் யுனிபார்ம் போடாம இருக்கார்.
கேப்போமா ?!!
ஸ்டுபிட் கேர்ள்... எந்த நேரத்துல காமடி பண்ற.... இந்த ரண காலத்துலயும்.... ஹும்...

முதல்ல இவனோட சொந்தகாரங்களுக்கு சொல்லுவோம்....பையில மொபைல் இருக்கா? இல்லையே... பேண்ட் பையில வேற தேடணுமா....
ச்சே வேணாம்.... ஆட்டோகாரர் கிட்ட சொல்லி எடுக்க சொல்லுவோம்...
முதல்ல ஹாஸ்பிடல் போவோம்....

.
.
.
.
.
என்ன அட்மிட் பண்ண மாற்றங்களா?...
போலீஸ கேஸ் பயில் பண்ணனுமா?
என்ன சொன்றாங்க இவங்க... ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கார்...

ஆட்டோ காரர் : சார் சட்டம் எல்லாம் மாறிடுச்சு... சட்டப்படி இப்ப கேஸ் பயில் பண்ணனும்னு அவசியம் இல்ல... மொதல்ல டாக்டர கூப்டுங்க... நா பேசறேன்...

அப்டியா ? இது எல்லாம் நமக்கே தெரியாம போச்சு...!!நாட்ல என்ன நடக்குதுன்னு தெரிய மாடிங்குதுப்பா....நமக்கு இத எல்லாம் சொல்றாங்களா??
.
.
.
.
._____

இப்படித் தான் எங்கள் காதல் கதை ஆரம்பித்தது...

இப்படிக்கு,
பல்லவி
(மீதி கதை வாசகர்கள் கற்பனைக்கு :)

2 comments:

Anonymous said...

நிஜமா கற்பனையா :) நல்லாருக்கு!!

Sateesh said...

கற்பனை தாங்க :)!!