கனவும் அவளும் (பாகம் - அ)

(ஒரு குறுந்தொடர்கதை, பாகம் - அ)
எல்லா வார சனிக்கிழமை போலவே அன்று மாலையும் அவர்கள் கடற்கரைக்கு காற்று வாங்க சென்றிருந்தனர். வானம் சற்று கறுத்து தான் காணப்பட்டது. மழை வரலாம் போல இருந்தது.

அவன் ரவி என்ற ரவிவர்மன். அவள் காயத்ரி என்ற காயத்ரி தேவி. இவர்கள் இருவரும் கடந்த பதினாறு மாதங்களாக காதலித்து வருகின்றனர். சென்ற புதனோடு இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இருவரும் அந்தச் சிறு வளர்ந்துவரும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

எல்லா காதலர்கள் போல உண்டேன், உடுத்தினேன் என அவசியமல்லாவற்றை பேசிமுடித்து விட்டு ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வாயெடுத்தான் ரவி. ஏனோ அவனுக்கு இன்று அவளிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.

"தேவி, நேத்து ஒரு பார்வட் மெயில் படிச்சே. அதுல நம்ம இன்போசிஸ் நாராயண மூர்த்தி சாரோட ஒய்ப் சுதாவ பத்தி படிச்சேன்"

"ஆமா ரவி, நா கூட படிச்சிருக்கேன். முன்னாலேயே அந்த மெயில் எனக்கு வந்திருக்கு"

"ம்!. ஹவ் க்ரேட் ஷி இஸ், இல்ல ? ஒவ்வரு ஆணோட வெற்றிக்கு பின்னாலயும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க. அது மூர்த்தி சார் விசயத்துல எவ்ளவு உண்ம தேவி"

"சரி தா ரவி! இது சாதாரண ஹவுஸ் ஓய்ப்ஸ்கும் அப்ளிகபில்"

"இருகலா தேவி ஆனா அவங்க எல்லாருமே ஒரு ஆண வெற்றி பெற வச்சாங்கன்னு சொல்ல முடியாது"

"அப்டினா சுதா மூர்த்தி போல எல்லா பொண்ணுங்கனால இருக்க முடியாதுன்னு சொல்றியா ரவி?"

"அப்டி இல்ல. அவங்க வாழ்க்கை முறை அதுக்கு ஒதுழக்காது.சுதா மூர்த்தி விசயத்துல அவங்க மூர்த்தி சாருக்ககவும் அவரோட கனவுக்காகவும் எவ்ளவோ த்யாகம் செஞ்சிருக்காங்க. உனக்கு தெரியுமா? , ஷி காட் ஹேர் எம்.டெக் ப்ரம் ஐ.ஐ.எஸ்.சி பங்ளூர் இன் 1975.

'பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்' ன்னு கண்டிசனோட இருந்த டாட்டா வோட டெல்கோ கம்பனி விளம்பரத்த படிச்சுட்டு கோபத்தோட ஜே.ஆர். டி டாட்டா வுக்கே லெட்டர் எழுதுனாங்கலாம். பின்ன கால் லெட்டர் அனுப்சு அவங்கள டாட்டா வேலைக்கு எடுத்துச்சாம்.

மூர்த்தி சார் இன்போசிஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி அவர விட அதிகம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்களாம்! பின்ன அந்த வேலைய விட்டுட்டு மூர்த்தி சார்'உடையும் , அவரோட பிரண்ட்ஸ்'உடையும் சேந்து இன்போசிஸ் ஆரம்பிச்சாங்களாம். அவங்க எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அவங்களாம் அப்ப கஷ்டபட்டதால தா நமக்கு இப்ப இவ்ளவு ஆப்பர்சுனடீஸ்.இந்த மாதிரி நெறைய சொல்லிடே போலாம்."

இவ்வாறு கதை சொல்லிவிட்ட பிறகு ரவி,
"சுதா மூர்த்தி பல பேருக்கு ரோல் மாடலா இருக்கனும்" , என்று கூறிக்கொண்டே காயத்ரியை குறிப்பது போல பார்த்தான்.

பல மாதங்களாக பாரமாக மனதில் வைத்திருந்ததை அன்று காயத்ரியிடம் சொல்லிவிடவேண்டும் என எண்ணியிருந்தான் ரவி.

"தேவி, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்த பத்தி சொல்லணும்"
இவ்வாறு அவன் சொல்லிக்கொண்டே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. எனென்றால், அப்போது மலைச்சாரல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்தது.

"ரவி, இப்ப கேளம்பினாதான் நான் ஹாஸ்டல் போய் சேர முடியும் போல டா, என்ன ட்ராப் பண்ணிட்ரியா?"

பலமுறை இந்த விசயத்தை காயத்ரியிடம் சொல்ல வந்து, சொல்ல முடியாத படி இப்போது ஆகிவிட்டது.

மழையை திட்டி என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் காயத்ரியை அவள் தங்கியிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டான். அப்போது மழை நன்றாக பிடித்துக்கொண்டது.....

கனவும் அவளும் (பாகம் - ஆ)
கனவும் அவளும் (பாகம் - இ)

1 comment:

Unknown said...

உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.. என் ப்ளாக்ல எந்த ப்ராப்ளமும் இல்ல.. நீங்க தாராளமா கமெண்ட் போடலாம்.. வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை மறுபடியும் பார்த்ததில் மகிழ்ச்சி.. நன்றி.. :))